Nayagi Serial: அடடே..ஒட்டுமொத்த தவறுகளும் ஒரே சீரியலில் அரங்கேறுதே!
சென்னை: சன் டிவியின் நாயகி எனும் ஒரே சீரியலில் உலகத்தின் ஒட்டு மொத்த தவறுகளும் ஒரேயடியாக அரங்கேறுது.
சொத்தை ஏமாற்றுவது, பொய் சொல்றது.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படறது...
கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாகறது...கல்யாணமாகாம குழந்தை பெத்துக்கறது.. பையன் அப்பாவுக்கு குடிக்க காசு கொடுப்பது... ஐயையோ!
துரையரசன் கலிவரதன்
கலிவரதன், துரையரசன் இருவரும் உழைக்காத சொத்துக்கு ஆசைப்படறது... சுலபமா கொலை செய்யறதுன்னு தப்பை செய்யறாங்க. அதோட, அனன்யா என்ன தப்பு செய்தாலும் சபாஷ்னு தட்டிக் கொடுத்து உறுதுணையா நிற்கும் அப்பா, மாமனார்னு கதையில கலக்கறாங்க.
Minnale Serial: கதை முழுக்க இப்படியாங்க கொலை செய்ய திட்டம் போடுவாங்க?
அகிலன் அனன்யா
அனன்யா படிச்ச பொண்ணு.. திருவின் மேல மயக்கம்னா மயக்கம் அப்படி ஒரு மயக்கம். அவன் மயக்கத்துல இருக்கும்போது, அவனுக்கு மட்டும் இல்லை.. அவனை பெத்தவங்களுக்கு கூட தெரியாம, தன்னை பெத்தவங்களுக்கும் தெரியாம அவனோட உயிரணுக்களை எடுத்து சேகரிச்சு வைக்கிறாளாம். இந்த அளவுக்கு ஒரு பொண்ணுக்கு ஆணின்மீது பித்து பிடிச்சு இருக்குமா என்ன? பின்னர் இதன் மூலம் கல்யாணம் செய்துக்காமலே இந்த சமூகத்தில் அகிலனை 10 மாதம் சுமந்து பெத்து எடுக்கிறாள்.
தங்கை அனு
திருவின் தங்கை அனு ஒரு படி மேலே போயி.. அமெரிக்காவுக்கு படிக்கப் போனவள் கல்யாணம் ஆகாமல் வயிற்றில் குழந்தையுடன் வருகிறாள். அதுவும் அமெரிக்காவில் படிச்சுட்டு பெண்கள் இப்படியும் இருப்பார்களா? எல்லாமே முன்னுக்கு பின் முரணா இருக்குதுங்க.
குடிக்க காசு
கண்மணி செழியன் கதையை ஆரம்பத்தில் பார்த்தால் கன்றாவிதான்.. அதைவிட இன்னும் செழியனின் அப்பா குடிக்க காசு வேணும்னு பிள்ளைகளிடம் காசு கேட்பது.. பையன் காரியத்தை சாதிச்சுக்க அப்பாவுக்கு குடிக்க காசு கொடுப்பது என்று நிஜமா கொடுமை.. கொடுமை!