அனாமிகான்னு உண்மையாவே ஒரு பொண்ணு வந்துட்டாளே...அப்போ நான் யாரு?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் திருமணம் சீரியலில் சந்தோஷ் ஜனனி தம்பதியாகியும் இவங்களுக்குள்ள இருக்கா இல்லையான்ற நூல் மாதிரி ஒரு மெல்லிய காதல் இழையோடிட்டு இருக்கு.
இதுக்கு நடுவுல சந்தோஷின் தம்பி நவீன் மேல, ஜனனியின் தங்கை அனிதாவுக்கு காதல் வந்துருது.விளையாட்டுத்தனமா ஏதாவது செய்யணும்னு நினைச்ச இந்த பொண்ணு வேற ஒரு சிம் கார்டு வாங்கி அனாமிகா,அனிதாவோட ஃபிரண்டுன்னு சொல்லி பேச ஆரம்பிக்குது.
நவீனும் அனிதாவோட ஃபிரண்டுன்னு நல்லா பேச ஆரம்பிச்சுடறான். அது காதலா மாறிடுது.நவீனுக்கு அனாமிகாவை நேரில் பார்க்கணும்னு ஆசை.எத்தனையோ தடவை கேட்டும், அனிதா மறுத்துடறா.
ஒரு வழியா நவீன் என்ன சொன்னாலும் சரி.. இத்தனை நாள் அனாமிகாவா நடிச்சு காதலிச்சது நான்தான்.நீ இப்பவும் என்னை காதலிக்கிறியான்னு கேட்டுடணும்னு நேரில் சந்திக்க ஒத்துக்கறா.
தன்னுடைய தோழியுடன், நவீனை சந்திக்க காஃபி ஷாப் போறா.அங்கே நவீன் எதிர்பார்ப்போட உட்கார்ந்திருக்கறதை மறைஞ்சு நின்னு பார்க்கறா. ஒரு வழியா மனசை திடப்படுத்திகிட்டு உள்ளே போனா..பயங்கர ஷாக்.
அங்கே ஒரு அழகானப் பொண்ணு நவீனை நோக்கி வர்றா..கிட்ட வந்து கையை நீட்டி ஹாய் நான்தான் அனாமிகான்னு சொல்லி சிரிக்கறா.நவீனும் வழியறான்.. கை குடுக்கறான். எப்படி இருக்கும், இத்தனை நாள் அனாமிகாவா நவீனை காதலிச்ச அனிதாவுக்கு.
பாவம் உடைஞ்சு போறா..அனாமிகா டிராமா எப்படிடி வெளியில போயிருக்கும்னு தோழிகிட்ட அழுது புலம்பிகிட்டு இருந்தவ.. வீட்டுக்கு வந்து செத்துடலாம்னு நினைக்கறா. அப்போதான் நவீன் போன் பண்ணி,அனாமிகாவை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அனிதா.உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்னு சொல்றான்.
இப்போ அந்த அனாமிகா யாருன்னு கண்டு பிடிக்கணும்னு இருக்கா அனிதா. இருந்தாலும் பாவம்..நவீனை அடைய முடியாமல் போயிருமோன்னு அழுது புலம்பறா.
ஆமாம்.. ஆறிப்போன பால் இப்போ எப்படி சூடாச்சு?
விளையாட்டு வினையாகும்னு சும்மாவா சொன்னாங்க...