அனாமிகான்னு பேரை வச்சுக்கிட்டு அனாமத்தா கிஃப்ட் வாங்கிக்கறா...போங்காட்டம் பட்.. காதல்...!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனியின் தங்கை அனிதா, அனாமிகான்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டு, அக்காவின் மச்சினன் நவீனை காதலிக்கறா.
திருமணம் சீரியலில் பெரிய அண்ணியின் அதிகாரம்தான் வீட்டில் எப்போதும் நடக்குது. இவங்க தங்கை ஆர்த்தியை நவீனுக்கு கட்டி வச்சு சொத்தை அபகரிக்க நினைக்கறாங்க.
நவீனுடன் அனிதா வேறு சிம்மில் பேசி, தன்னை அனிதாவோட ஃபிரண்ட் அனாமிகான்னு சொல்லி பேச ஆரம்பிக்கறா .நவீனும் பேச பேச அனாமிகாவை லவ் பண்ண ஆரம்பிச்சுடறான். நேரில் இப்போதைக்கு பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டுடறா அனாமிகா.
ஐ... பவுர்ணமி பாப்பாவுக்கு காதல் வந்துருச்சு.. குதூகலிக்கும் பாட்டி!
புடவை
அனாமிகாவுக்கு புடவை வாங்கிட்டு வந்து அனிதாவிடம் குடுத்து, அவகிட்ட குடு அனிதான்னு சொல்றான். வீட்டுல வந்து பிரிச்சு பார்க்கறா அழகான புடவை. உடனே அனாமிகாவா பேச வச்சிருந்த நம்பர்ல போன் செய்து, புடவை ரொம்ப பிடிச்சிருக்குங்கன்னு சொல்றா.
என்ன புடிக்கும்
அனாமிகா உங்களுக்கு என்ன புடிக்கும்னு சொல்லுங்க.. வாங்கி அனிதாகிட்ட குடுத்து அனுப்பறேன்னு சொல்றான். எனக்கு என்ன புடிக்கும்னு அனிதாவுக்கு தெரியும். பார்க்கவும் அனிதாவும், நானும் ட்வீன்ஸ் மாதிரிதான் இருப்போம்னு சொல்றா.அவன் அனிதாவை அழைச்சுக்கிட்டு கடைக்கு போயி இஷ்டத்துக்கு வாங்கித் தர்றான். அனிதா குஷியில் மிதக்கறா.
பார்க்க போறேன்
இப்போ எல்லாம் நான் அடிக்கடி அனிதாவைத்தான் பார்க்க போறேங்கன்னு சொல்றான். அனிதாவை பார்க்கவா எதுக்குன்னு குறும்பா சிரிச்சுகிட்டே கேட்கறா அனிதா. நீங்கதானே சொன்னீங்க.. நானும் அவளும் ட்வீன்ஸ் போல இருப்போம்னு.. அதனாலதான்னு அவன் அப்பாவியா சொல்றான்.பரவால்லை.. அவளை பார்க்க போங்கன்னு சொல்றா.
நடு வீட்டுக்கு
அனிதாவுக்கு நவீன் மேல காதல் முத்தி நடு வீட்டுக்கு வந்துதுன்னு சொல்ற மாதிரி, அவன் தன்னோட ரூமுக்கு வந்துட்டார் மாதிரி கற்பனை பண்ணிக்கறா.. அண்ணி வந்து பேசினா நவீன் பேசறது போல பிஹேவ் பண்ணி அவங்களை கட்டி பிடிச்சுக்கறா..
பாவம், காலேஜ் பொண்ணுங்களுக்கு லவ் வந்துட்டா இப்படித்தானோ...