அனாமிகாவுக்கு நவீன் குடுத்த புடவை .. அது எப்படி அனிதாகிட்ட போச்சு?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஒருதலை காதல் ஒண்ணு, அனாமிகான்னு ஆளே இல்லாத பேரில் நவீனை காதலிக்கும் அனிதா, அனாமிகா அனிதாவோட படிக்கற பொண்ணுன்னு உண்மையா நினைச்சு அனாமிகாவை போனில் மட்டுமே காதலிக்கும் நவீன்.
நவீனை ஒரு தலையாக காதலிக்கும், நவீன் அண்ணியின் தங்கை ஆர்த்தி.இப்படி மூணு வகை காதல் திருமணம் சீரியலில் ஓடுது.இதுக்கு நடுவுல நண்பரின் பொண்ணை தனது இரண்டாவது பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு ஆசைப்பட்டு சந்தோஷின் அப்பா அதாவது நவீன் அப்பா, ஜனனியை கல்யாணம் செய்து வச்சுடறார்.
ஆனா, சந்தோஷ் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிச்சுக்கிட்டு இருக்கான்.அப்பாவோட கட்டாயத்துக்காக ஜனனியை கல்யாணம் செய்துக்கறான்.ஜனனியும், சந்தோஷும் வாழ்க்கையை ஆரம்பிக்கலை. டிவோர்ஸ் பண்ணிடலாம்னு இருக்க, சந்தோஷின் அண்ணி சதி செய்து ஜனனியின் அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
அச்சச்சோ நிலா மாட்டிகிட்டாளே ... அப்பா சப்போர்ட்டும் போச்சா!
அனிதாவுக்கு
அனிதா ஜனனியோட தங்கச்சி... அனிதாவோட தோழிதான் அனாமிகான்னு, குரலை மாத்தி நவீன் கிட்ட பேசறா அனிதா. நவீன் அனாமிகாவின் காதல் வலையில் விழறான். ஆனா, அனிதான்னு தெரியாம அனாமிகாவைப் பார்க்கணும்னு துடிக்கறான். அனிதாவுக்கு போன் செய்து அனாமிகாவை ஒரே ஒரு தடவை பார்க்கணும்னு சொல்றான்.
பேசறா
அனிதா அனாமிகாவா நவீன் கூட பேசறா.. நவீன் ப்ளீஸ் இப்போ பார்க்க வேணாம்.. பிரச்சனை ஆகிரும். நான் மென்டலா இன்னும் ப்ரிப்பேர் ஆகலை. அதனால், எனக்கு எப்போ உங்களை பார்க்கணும்னு தோணுதோ அப்போ நானே உங்களை பார்க்கறேன்னு சொல்றா.
இதை அனாமிகாவுக்கு
அனிதா, இன்னும் ஒரே ஒரு ஹெல்ப்.. இந்த கிஃப்டை நான் குடுத்தேன்னு அனாமிகாகிட்ட குடுத்துடு. நான் மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குப் போறேன். எப்போ வருவேன்னு தெரியாதுன்னு நவீன் சொல்றான்.அனிதாவுக்கு முகம் மாறுது. கட்டாயம் வெளிநாட்டுக்கு போயாகணுமா நவீன்னு கேட்கறா.அது என்னோட ஆம்பிஷன் அனிதான்னு பதில் சொல்றான். சரி குடு.. இனிமே அவளை தொந்திரவு பண்ண கூடாது... அவ என்னை கோச்சுக்கறான்னு சொல்லிட்டு போறா அனிதா
பார்த்தால் புடவை
அனாமிகான்னு ஒருத்தி இல்லை...அவனை நான்தான் ஏமாத்தினேன்னு சொன்னா அவன் என்னை வெறுத்துருவானா, அவனை நான் காதலிக்கிறேன் என அழுகிறாள் அனிதா... சரி என்று பார்சலைப் பிரித்துப் பார்க்க அழகிய புடவை.
வாழாத
புடவையை தன் மேல் வைத்து அழகு பார்க்கிறாள், தோழிக்கு போன் செய்து அழகான எனக்கு பிடிச்ச கலர் புடவைடி..ரொம்ப நல்லாருக்குன்னு சொல்றா.புடவையை உடுத்திகிட்டு, வீட்டில் அனைவரும் இருக்க வளைய வருகிறாள். அப்போதான் நம்ம டைரக்டர் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு பாடலில் அஜீத்தும், ஷாலினியும் பாடிக்கொண்டு இருக்க எவருமே கண்டுகொள்ளாமல் இருப்பாங்களே அதுபோல இருக்க மாதிரி காட்சி அமைச்சு இருக்கார்.
இந்த காதல் எதில் போய் முடியுமோ...