Naam Iruvar Namakku Iruvar Serial: ஆனந்தி கல்யாணமாகி 10 நாளில் முழுகாம இருக்காளா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் தங்கச்சி ஆனந்தி கல்யாணமாகி 10 நாளில் முழுகாம இருக்களாம்.
பாவம்.. கார்த்திக்கை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்ட ஆனந்தியின் கல்யாணத்தின் போதே கலாட்டாதான் நடந்துச்சு.
கல்யாணம் ஆன நாளில் இருந்தே ஆனந்திக்கு சோதனைதான்... இப்போ இது வேறே...
சொன்னார் அப்பா
மணவறையில் உட்கார்ந்திருந்த கார்த்திக், மாயன் கல்யாணத்தில் இருக்க கூடாது என்று சொல்ல, அப்பா ஆனந்திக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி ஆனந்தியை மணவறையை விட்டு எழுந்துவர சொன்னார். அனந்தி இந்த கல்யாணம் நடக்கும்... நான் எழுந்து வர மாட்டேன் என்று சொல்லி, எனக்கு கார்த்திக்தான் வேண்டும் என்று பிடிவாதமாக மணவறையில் உட்கார்ந்து இருந்தாள்.
Kalyana Veedu Serial: ஊதி ஊதி பெரிசாக்கற மாதிரி இருக்கே.. இது நல்லதுக்கா கெட்டதுக்கா?
மகள் இல்லை
இப்படி பிடிவாதமாக கார்த்திக்குடன் கல்யாணம் செய்துகொண்டதால் யாருக்கும் ஆனந்தியை பிடிக்கவில்லை. அப்பாவுக்கு மகள் இல்லை என்று ஆனது. அப்பாவை தரக்குறைவாக பேசிய கார்த்திக்கை மணந்துகொண்டாள் ஆனந்தி என்று மாயனுக்கும் தங்கையைப் பிடிக்கவில்லை.
கார்த்திக் பழிவாங்க
கார்த்திக் மாயனின் தங்கை ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டு, வேண்டும் என்றே மாயனை பழிவாங்குவது போல நடந்துகொண்டான். இதுக்காகவே ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டானோ என்று என்னும் அளவுக்கு தங்கைக்கோர் கீதம் போல கதை நகர்ந்துக்கொண்டு இருந்தது.
கடைசியில் இதற்குத்தானா?
ஆனந்தி அப்பா அவமானப்பட்டாலும் இந்த கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்ததும், மாணவறையை விட்டு எழ மாட்டேன் என்று அடம் பிடித்ததும் கடைசியில் இதற்குத்தானா?அதாவது எண்ணி 10 நாட்களில் ஆனந்தி முழுகாமல் இருக்கிறாளே... புரியவில்லை?
கல்யாணத்துக்கு முன்பே கார்த்திக் மாயனை பழிவாங்கும் விதத்தில் ஆனந்தியிடம் கசமுசா பண்ணிவிட்டான் கார்த்திக்.