அம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை வருதே.. அஞ்சலிக்கு அப்பா வேணுமாம்...!
சென்னை: சன் டிவியில் மாலை 6: 30 மணிக்கு ஒளிபரப்பாகும் சந்திரகுமாரி சீரியல் எந்த வித மாற்றமும் இல்லாம போயிகிட்டு இருக்கு.
நாம் விரும்பத்தக்க மாற்றங்கள் எதுவும் சீரியலில் இல்லை. வழக்கமான அண்ணாமலை பாணி கதையாத்தான் இருக்கு,
அஞ்சலி தனது அப்பாவை சந்திப்பதை, அம்மாகிட்ட சொல்லாம இருக்கா அஞ்சலி.ஏன் லேட்டாச்சுன்னு கேட்டா வேலை இருந்துச்சுன்னு சொல்றா. சரி சாப்பிடலாம் வான்னு கூப்பிட்டா, சொல்றாங்க சாப்பிட்டுட்டேன்னு சொல்றா.
அட..பொம்பளைங்க புடவை முந்தானைக்கு இத்தனை மவுசா...
தனியா நீ போயி சாப்பிட மாட்டியே எப்படி அஞ்சலின்னு கேட்கறாங்க அம்மா. நீ யாரையோ அடிக்கடி சந்திக்கறதா சொல்றாங்கன்னு அம்மா..கேட்கறாங்க.
அம்மா இப்போ உங்களுக்கு என்ன வேணும்..நான் அப்பாவைத்தான் பார்த்துட்டு வரேன்னு சொல்றா அஞ்சலி.அவர் சொல்றது எதுலையும் உண்மையில்லைன்னு .நான் சொல்லியும் அவரை நம்பறியா அஞ்சலி..அவர் என்கிட்டேயிருந்து உன்னை பிரிச்சு, உன் வாழ்க்கையை அந்த ருத்ரா பேச்சை கேட்டு வீணாக்கிருவார்னு சொல்றாங்க அம்மா.
இல்லம்மா..அவர் இப்போ மாறிட்டார்.அவர் கண்ணுல உண்மையைப் பார்த்தேன்.நானும் அவர் செய்ததை மறக்கலைம்மா.. ருத்ராவை விட்டு வந்தாதான் நான் பேசுவேன்னு கண்டிஷன் போட்டு இருக்கேன் மான்னு சொல்றா.
அவர் அவளை விட்டு வருவார்னு நினைக்கறியா.. இது சரி வராதுன்னு அம்மா சொல்ல, அம்மா உங்களுக்கு வேணாபுருஷன் தேவை இல்லாம இருக்கலாம்.அவரை நீங்க மன்னிக்காம கூட இருக்கலாம். ஆனா,எனக்கு அப்பா வேணும்மான்னு போட்டாளே ஒரு போடு.
பாவம் சந்திரா.. இனி அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டைதானே வரும்..இதோ இப்பவே ஆரம்பிச்சாச்சே..