பெட்ரூம்ல காலுக்கு கீழயா... தலைக்கு மேலயான்னு தெரியாம... சீ...கர்மம் கர்மம்...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அனு எப்படி பால் போட்டாலும் அதை சிக்ஸர் அடிச்சு அசத்திடறாங்க ரோஜாவும், அர்ஜுனும்.. இதுல செம கடுப்புல இருக்கா அனு.
பாட்டியும், கல்பனா அத்தையும் ரெகுலர் செக்ப்புக்கு ஆஸ்பத்திரிக்கு போயிருக்க, யசோதாவின் போனில் அர்ஜுனும், ரோஜாவும் தங்களது கான்ட்ராக்ட் கல்யாணம் பத்தி முழுசா பேசறதை யசோதா பிள்ளைங்க வீடியோ எடுத்துடறாங்க.
அது யசோதாவின் கண்ணில் பட்டுடுது., அனுவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடறாங்க. அனுவும் அப்படியே வச்சிருங்க அதை பாட்டிகிட்ட நான் காட்டுறேன்.. உங்களுக்கும் 10 லட்சம் பணம் தரேன்னு சொல்லிட்டு, உடனே கிளம்பி பாட்டி வீட்டுக்கு வர்றா.
தங்கச்சி கூட சுத்திட்டு அக்காவோட கல்யாணமா.... ஐயே ஆசை தோசை அப்பளம்.. வட போச்சே!
சீக்கிரம் பாட்டி
பாட்டி சீக்கிரம் வாங்க உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காட்றேன்னு போன் பண்றா. என்னனு சொல்லு அனு.. வந்துக்கிட்டுத்தான் இருக்கோம்னு சொல்றாங்க பாட்டி. நேரில் வாங்க பாட்டி சொல்றேன்னு சொல்லிட்டு வச்சுடறா. இவ வேற என்னன்னு சொல்லாம கட் பண்ணி வச்சுட்டா.. டிரைவர் சீக்கிரம் போப்பான்னு சொல்றாங்க பாட்டி.
மணி அடிச்சு
ஒரு வழியா பாட்டியும் கல்பனாவும் வீட்டுக்கு வந்துடறாங்க. என்ன அனு..அவசரம் அவசரம்னு சொல்லி படுத்தி எடுக்கற. என்னவிஷயம்னு சொல்லுன்னு பாட்டி சொல்றாங்க.இருங்க பாட்டி, அர்ஜுன் மாமா ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் குடும்பத்துல பேசணும்னா, மணி அடிச்சுதானே கூப்பிடுவார்.அதே போல எல்லாரையும் கூப்பிடறேன்னு அனு சொல்றா.
ஹாலில் ஆஜர்
அதன் படி பூஜை மணியை அடிக்க, எல்லாரும் ஹாலில் ஆஜர். இதைப் பாருங்க பாட்டி நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. இந்த டிவியில படம் போட்டு காமிக்கறேன் பாருங்கன்னு சொல்றா. படம் போட்டு காமிக்கறியா.. சரி சரி போடுன்னு பாட்டி சொல்ல, இப்போதுதான் குடும்பத்துல அமைதியும், சந்தோஷமும் இருக்கு.. இவ என்ன பண்ணி தொலைக்கப் போறாளோன்னு புலம்பறாங்க கல்பனா.
ரோஜா இடுப்பில்
ரிமோட்டை ஆன் பண்ண, ரோஜா உதிரிப் பூக்கள் தாங்கின தட்டை எடுத்துட்டு வர்றா. பின்னாடி வந்த அர்ஜுன் இவள் இடுப்பில் கை வைக்க தட்டு கொட்டி, இருவர் மேலும் பூக்கள் சிதறி விழுது. ரோஜாவை அப்படியே பின்புறமாகத் தூக்கி அவள் கால்களை நீட்ட விட்டு சுத்தறான்.
ரொமான்ஸ்
ரோஜா விடுங்க சார் விடுங்க சார்னு சொல்ல, அவளைத் தாங்கிப் பிடிச்சு ரொமான்ஸ் பண்றான். இந்த காட்சிகளை பார்த்து எல்லாரும் கூச்சப்படறாங்க. யசோதா அவ புருஷன், அனு மூணு பேரும் அதிர்ச்சியாகறாங்க.
கேமிரா
இந்த சமயத்துலதான் ரோஜா அனுன்னு சத்தமா கூப்பிட்டு, இங்க வான்னு அழைச்சுக்கிட்டு வந்து பாட்டிகிட்ட நிறுத்தறா. என்ன அனு இது, புருஷன் பொண்டாட்டி ரூம்ல இப்படியா கேமிரா வைப்பாங்க. எவ்ளோ பெரிய குடும்பத்துல பிறந்தவ நீ.. இப்படியா கேவலமா நடந்துப்ப.. ஒரு புருஷன் பொண்டாட்டி ரூம்ல தலைக்கு மேல காமிரா இருக்குமா .. இல்லை காலுக்கு கீழ கேமிரா இருக்குமான்னு பயந்துகிட்டே புருஷன் பொண்டாட்டி எப்படி நிம்மதியா இருக்க முடியும்னு சொல்றா...
அனு பாட்டின்னு சொல்ல, சீ அனு..இப்படிப்பட்ட பொண்ணா நீ.. இனிமே பேசாத.. நீ எங்க குடும்பத்து பொண்ணுதானான்னு சந்தேகமா இருக்குன்னு பாட்டி சொல்றாங்க.