மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் செம்பாவுக்கு நியாயம் கிடைக்கற மாதிரி கதை திரும்பி இருக்கு.
வினோதினியை அவன் காதலன் ஹரீஷ் கூட திருட்டுத் தனமா அனுப்பி வச்சது செம்பாதான்னு வீட்டில் ஒரே கலவரம். கட்டின புருஷன் கூட நம்ப மாட்டேங்கறான்.
யாரும் நம்பலேன்னா நான் தீக்குளிச்சுதான் சின்ன ஐயா நிரூபிக்கணும்னு செம்பா சொல்ல, தேவை ஏற்பட்டா அதையும் செய்துதான் ஆகணும் செம்பான்னு சொல்றான் புருஷன் கார்த்திக்.
போன் அடிச்சாலும் வினோ போன் ஆஃப்ல இருக்கு. வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கறா செம்பா. கோயிலில் செம்பா உட்கார்ந்து தீயை தன் மேல எப்படி வச்சுக்கறதுன்னு யோசிச்சு அழுதுகிட்டு இருக்கா.
இங்க கல்யாணத்துக்கு ஆசையா தாலி, புடவை எல்லாம் வாங்கிகிட்டு சாப்பிட ஹோட்டலுக்கு போறாங்க. அங்க விநோதினியும், ஹரீஷும் ரொமான்ஸ் பார்வை பார்த்துக்கறாங்க. அவ சாப்பிடுங்கன்னு சொல்ல, அவன் டேபிள் மேல இருந்த வினோவின் கை மேல மெதுவா தன் கையை வைக்கறான்.
அவ வெட்கப்பட்டு தலை குனிய, அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு போறான் ஹரீஷ். நண்பர்கள் ஏய்னு கத்த இருவரும் சுய நினைவுக்கு வர்றாங்க. அங்கே வந்திருக்கும் ஒரு அம்மா உன் போனை குடும்மா பேசிட்டு தரேன்னு சொல்றாங்க.
போனை ஸ்விட்ச் ஆன் பண்ணிய பிறகு, குடுக்கறா, பிறகு பார்த்தா செம்பாவின் 10 வாய்ஸ் மெசேஜ்.அதை கேட்ட வினோதினிக்கு. இப்போதான் அம்மா அப்பா நினைவும் வருது. கல்யாணத்துக்கு ஐயர் கூப்பிட, ஹரீஷிடம் பேச துடிக்கறா வினோதினி. ஆனா, அவன் கல்யாணத்துக்கு ஆசையா தயாராகிறான்.
அச்சச்சோ.. ஸ்வேதாவும் சஞ்சயும் கையும் களவுமா...சீ...அசிங்கம்!