Aranmanai Kili Serial: தெய்வ பாம்பு தீண்டினால் ஒரு மாசம் கழிச்சு விஷம் ஏறுமாமே...!
சென்னை: தனக்கு பிடித்த புருஷனுக்காக ஒரு பெண் எதையும் செய்வாள் என்பதை எடுத்து காண்பிக்கும் சீரியலாக அரண்மனை கிளி சீரியல் இருக்கிறது என்று சமாதானமாக சொல்லிக் கொள்ளலாம்.
விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில், தனது அப்பா காலத்தில் இருந்து, தங்களது குடும்பத்தை வாழ வைத்த மீனாட்சி அம்மா மகன் அர்ஜுனுக்கு தனது முதல் மகள் ரேணுகாவை கல்யாணம் செய்து வைக்கலாம் என்று அப்பா நினைக்கிறார்.
ஆனால், கால் நடக்க முடியாத மீனாட்சி அம்மா மகன் அர்ஜூடன் தன்னால் வாழ முடியாது என்று மண்டபத்தை விட்டு ஓடிவிடுகிறாள் ரேணுகா. உடனடியாக தங்கை ஜானுவுடன் அர்ஜுனுக்கு கல்யாணம் நடக்குது.
ஜானுவை யாருக்கும்
ஜானு என்கிற ஜானகியை வீட்டில் யாருக்கும் பிடிக்கலை.தாலி கட்டிய கணவன் அர்ஜூனுக்கும் பிடிக்கலை. உடனே விவாகரத்து செய்துட ஏற்பாடுகள் செய்யறாங்க. அதற்குள் ஜானு, கணவன் அர்ஜுனுக்கு பணிவிடைகள் செய்து, அவன் நடப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறாள்.
ஆஷ்ரமம் மூலிகை
கடையில் பூஜை, புனஸ்காரம், ஆஷ்ரமம், காடுகள், மலைகளை கடந்து மூலிகை எடுத்து வருவது என்று படாத பாடு படுகிறாள் ஜானகி. பாம்பு தேவர்கள் குடியிருக்கும் மலைக்கு சென்று,அங்கு வாசுகி பாம்பு வர பூஜை செய்கிறாள்.அந்த பாம்பு வெளியில் வந்து அர்ஜுன் காலைத் தீண்டிப் போகிறது. அர்ஜூனால் இனி நடக்க முடியும். ஆனால் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பாசத்தில் வாக்கு
ஜானு புருஷன் பாசத்தில் என் புருஷன் நடக்க நீ வழி செய்தால், நீ என்ன செய்ய சொன்னாலும் செய்கிறேன் என்று சிவன் முன்னால் வாக்கு கொடுக்கிறாள். அதற்கு பின்னர்தான் எல்லாமே நல்ல படியாக நடக்கிறது. இப்போது, சித்தர் வந்து கொடுத்த வாக்கை மறந்துட்டேன்னு அடிக்கடி மிரட்டி வா வான்னு கூப்பிடுகிறார்.
ஜானு போகிறாள்
சித்தரின் மிரட்டலான அழைப்பை தாங்கிக்க முடியாமல் அவள் போகிறாள்.அங்கு சிவன் சிலை முன்பு அந்த சித்தர் கூறுகிறார்.உன் உயிரை தருவதாக சொன்னாய். இப்போது கண்டுக்காமல் இருந்தால் எப்படி என்று மிரட்டுகிறார். அதற்கு ஜானு, அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அதை முடித்துவிட்டு வரேன் சுவாமின்னு கேட்கிறாள்.
ஆலகால விஷம்
சிவனின் ஆலகாலம் விஷம் கொண்ட தெய்வ பாம்பு வந்து உன்னைத் தீண்டிவிட்டுப் போகும். வரும் பவுர்ணமிக்குள் அது உன் தலைக்கு ஏறி விஷமாக மாறும், அதற்குள் நீ சொன்னபடி இங்கு வந்துவிட வேண்டும் என்று சித்தர் கூறுகிறார். ஜானும் சரி என்று சொல்லி சிவனை வணங்கிவிட்டு வருகிறாள்.
என்ன செய்யறது..பதி பக்தி, புருஷன் பாசம் உள்ளவர்களுக்கான கதை இது. லாஜிக் இல்லாமல் இதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.