Aranmanai Kili Serial: தன்னை நிராகரிச்ச பொண்ணுக்கு அர்ஜுன் தாலி வாங்கித் தர்றானே!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் கதை, இப்போதுதான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கிறது என்று சொல்லலாம்.
அதாவது அர்ஜுன் ஜானு விவாகரத்து விவகாரம் சூடு பிடிக்கத் துவங்கி இருக்கு. அதே சமயம் ஜானுவின் மனசில் இப்போதைக்கு ஒரு பொஸசிவ் வந்திருக்கு. தன் புருஷனை யாருக்கும் விட்டுத் தர கூடாது என்று.
அர்ஜுனிடம் சொல்ல வரும்போது அவளுக்கு தொண்டையில் பேச்சு வர மாட்டேங்குது. எதுவோ பேச வந்து எதையோ செய்துவிட்டு போவது போல இன்னும் அர்ஜுனிடம் பேச தைரியம் வராதவளாக இருக்கிறாள்.
பரம்பரை தாலி
ஜானுவை ஷாப்பிங் போகலாம் வான்னு அழைச்சுக்கிட்டு போறான் அர்ஜுன். எதுக்கு சார் இப்போ ஷாப்பிங்ன்னு ஜானு கேட்க, ஒண்ணும் இல்லை.. பேசாம வான்னு சொல்லி அழைச்சுட்டு போறான். அங்கே போயி, ஒரு கல்யாண புடவை எடு ஜானுன்னு சொல்றான். கல்யாண புடைவையா டைவர்ஸ் பண்ணிட்டு உடனே சார் இன்னொரு கல்யாணத்துக்கு தயாராகிட்டாரான்னு நினைக்கிறாள்.
Kalyana Veedu Serial: எல்லாம் சரிதான் அந்த ஒரு மாசம் எங்கே போயிருந்தீங்க கோபி?
பரம்பரை தாலி
தாலிக்கு ஆர்டர் பண்ணி இருக்கேன் ஜானு. அவர்தான் போன் செய்தார். தாலி ரெடியாகிருச்சாம்... நம்ம பரம்பரை தாலி மாதிரிதான் செய்து இருக்காராம். வீட்டுக்கு போனதும் வர சொல்லி இருக்கேன் ஜானுன்னு சொல்றான். ஓ.. பரம்பரை தாலிக்கு வேற ஆர்டர் குடுத்தாச்சா... சார் உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது சார்னு தனக்குத் தானே பேசிக்கறா.
அர்ஜுன் விஜயாக்கா
என்னடி போகும்போது குதூகலமா போனே.. இப்போ மூஞ்சை இப்படி வச்சுக்கிட்டு வர்றேன்னு கேட்கறா. விஜயாக்கா எனக்கு மனசு சரி இல்லைக்கான்னு சொல்றா.. என்னாச்சு விவரமா சொல்லுடீன்னு கேட்கறா விஜயா. அக்கா ஷாப்பிங் போன இடத்தில் கல்யாண புடவை, தாலின்னு வாங்கினாருக்கா.எதுக்குன்னு கேட்டால் சொல்ல மாட்டேன்னு சொல்றார். இன்னிக்கு இதை பத்தி பேசாம விட மாட்டேன்க்கான்னு சொல்லிட்டு மாடிக்கு கோவமா போறா.
என் தங்கம்
இப்படி சொல்லிட்டு போடி என் தங்கம்.. இப்போதுதான் உன் புருஷன்னு நினைப்பே உனக்கு வர ஆரம்பிச்சு இருக்குன்னு சொல்றா விஜயா. சார்..என்னால் உங்களை விட்டு போக முடியாது சார். உங்க கூட மட்டும்தான் சார் என் வாழ்க்கைன்னு சொல்ல வந்துட்டு, பேசாம நிக்க, என்ன ஜானு நிக்கறேன்னு கேட்கறான் அர்ஜுன்.
ஏன் குங்குமம்
சார், கல்யாண புடவையும், தாலியும் வாங்கினீங்களே அது யாருக்கு" இந்த தாலீக்கு நான் ஏன் குங்குமம் வைக்கணும்னு கேட்கிறாள் ஜானு. அந்த தாலி உங்க அக்கா ரேணுகாவுக்கு ஜானு. அவளுக்கு நாமதான் தாலி வாங்கணும். ரேணுகாவுக்கு கல்யாணம் தெரியுமான்னு கேட்கறான்.
ரேணுகா மீனாட்சி அம்மாவை பழி வாங்க அர்ஜுனின் தம்பியை காதலிக்கிறாள். முதலில் அர்ஜுனுக்கு பேசி முடித்து,அர்ஜுனை பிடிக்காமல் ஓடிப்போனவள் ரேணுகா.தன்னை நிராகரிச்ச ரேணுகாவுக்கு தாலி வாங்கித் தர்றான் அர்ஜுன். பெரிய மனசுதானே!