Aranmanai Kili Serial: சென்டிமென்ட்ஸ் ஹீரோயிஸம் ரெண்டுமே ஓவர் டோஸ்!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் சென்டிமென்ட்ஸ், ஹீரோயிசம் இரண்டுமே கொஞ்சம் ஓவர் டோஸேஜா இருக்கு. தாங்க முடியலை... சீக்கிரம் ஃபிளாஷ் பேக்கை முடிச்சுகிட்டா தேவலாம்.
முன்னாள் காதலி... முன்னாள் காதலி என்று அர்ஜுனின் முன்னாள் காதலி சுப்பு லட்சுமி பத்தி விஜயா சலிக்க சலிக்க ஜானுவிடம் கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.
எல்லாமே சினிமா பாணி ஹீரோயிசம்தான்.. புதுசா எதுவும் இல்லை. ஜானு, அர்ஜுன் கதையே புதுசா நல்லா இருக்குதே.. இது எதுக்கு இடைச் செருகலாக?
Actress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா?
அர்ஜுன் வீல் சேர்
அர்ஜுனை எப்போதும் வீல் சேரில் பார்த்துட்டு, இப்போது ஹீரோயிஸத்துடன் பார்ப்பது மட்டுமே ஃபிளாஷ் பேக்கில் ஆறுதல். ஆனால், நடக்க முடியாத அர்ஜுனை கல்யாணம் செய்தும்,அவனை நடக்க வைக்க போராடி ஜெயித்தும் வந்துட்டா ஜானு. ஆனாலும் அர்ஜூனால் நடக்க முடியும் என்பதை இன்னும் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் இருப்பது நமக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது.
ஜானு ரேணுகா
மீனாட்சி அம்மா ஜானுவை தனது மகன் அர்ஜுன் விவாகரத்து செய்துடணும் என்கிற எண்ணத்தில் இருக்காங்க. கூடிய சீக்கிரம் விவாகரத்து கிடைக்கவும் போகிறது. அதனால், ஜானுவை கூப்பிட்டு, மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு தயாரா இருக்கியா...உன் அக்கா ரேணுகாவை இந்த ஊரை காலி செய்துகிட்டு போன்னு எத்தனையோ முறை எச்சரிக்கை கொடுத்துட்டேன். அவ யாரையோ லவ் பன்றேன்னு என்கிட்டேயே சொல்லிக்கிட்டு திரியரா. நீயாவது நான் சொல்ற பேச்சை ஓழுங்கா கேளுன்னு சொல்றாங்க. கிடைக்கவும் போகிறது. அதனால், ஜானுவை கூப்பிட்டு, மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு தயாரா இருக்கியா...உன் அக்கா ரேணுகாவை இந்த ஊரை காலி செய்துகிட்டு போன்னு எத்தனையோ முறை எச்சரிக்கை கொடுத்துட்டேன். அவ யாரையோ லவ் பன்றேன்னு என்கிட்டேயே சொல்லிக்கிட்டு திரியரா. நீயாவது நான் சொல்ற பேச்சை ஓழுங்கா கேளுன்னு சொல்றாங்க.
யார் ஜானு
ஜானு தன்னை யார்னு அந்த வீட்டுக்கு நிரூபிச்சு, அர்ஜுனை நல்லபடியா கவனிச்சுக்கிட்டு இருக்கா. ரேணுகா ஜானுவின் அக்கா அர்ஜுனைப் பிடிக்காமல் ஓடிவிட்டதால் அவசரத்துல இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்னு சவால் விட்ட மீனாட்சி அம்மா , ஜானுவை பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க. அப்பறம் எப்படி எதுக்கு அவளை விவாகரத்து பண்ண கட்டாயப் படுத்தறாங்க?
அர்ஜுன் ஜானு
ஜானு அர்ஜுனுக்கு சுப்பு லட்சுமியின் நினைவை கொண்டு வந்துட்டா, அப்போதுதான் அதெல்லாம் பழைய கதை ஜானு. இப்போ அது பத்தி என் மனசில கொஞ்சம் கூட நினைவு இல்லை. ஆமாம், உனக்கு என் கால் எப்படி நடக்க முடியாம போச்சுன்னு தெரியுமான்னு கேட்கறான். இல்லை சார் எனக்கு தெரியாது. சொல்லுங்கன்னு கேட்கிறாள் ஜானு.
நாமும் ஆவலுடன் காத்திருப்போம், கதைக்காக!