Aranmanai Kili Serial: அரண்மனை கிளிக்குள் தளபதியின் ஒரு காட்சி
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் பெரும் தொழிலதிபரான மீனாட்சி அம்மாவின் முதல் மகன் அர்ஜுன். இவன் முன்பு சுப்பு லட்சுமி என்கிற பெண்ணை காதலிச்ச விஷயம் பற்றி கதை ஒளிபரப்பாகிட்டு வருது.
அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில் சுப்பு லட்சுமி பற்றி ஜானுவின் புருஷன் அர்ஜுன், மனைவி ஜானுவிடம் சொல்லும்படி ஆகிறது. இப்போது லாரி விபத்தில் தன்னால் எப்படி நடக்க முடியாமல் போனது என்பதை சொல்கிறான்.
சுப்புலட்சுமி அர்ஜுனை காதலிச்சாலும், வீட்டில் அப்பா பேச்சை கேட்டு நடந்து, அர்ஜுனை வெளியே போக சொல்கிறாள். அர்ஜுனும் காரில் கோபமாக, வேகமாக போகிறான்.
Eeramana Rojave Serial: அந்த பக்கம் திரும்புங்க குளிக்கறதை போயி... சிணுங்கிய மலர்!
சுப்புலட்சுமி அர்ஜுன்
சுப்பு லட்சுமியை காதலிக்கற விஷயத்தில் அவளின் அப்பா அர்ஜுனிடம் கோபமாக பேச, அர்ஜுன் சுப்புலட்சுமி அப்பாவின் கழுத்தை பிடிச்சுடறான். தளபதி படத்தில் தலைவர் ரஜினி காதலிக்கும் ஷோபனாவுக்காக தோப்பனார் மீது கை வச்சததை சகிச்சுக்க முடியாமல் நடிகை ஷோபனா பேசின வசனத்தை இங்க சுப்பு பேசறாங்க.
துர்கா வேலை
சரி, இதனால் அர்ஜுன் காரை வேகமாக ஓட்டிக்கிட்டு போனதால், லாரியில் மோதி, விபத்தில் கால் நடக்க முடியாமல் போகிறது. கடைசியில் இப்போது பார்த்தால் மீனாட்சி அம்மா வீட்டில், மீனாட்சி அம்மாவை சித்தி சித்தின்னு கூப்பிட்டுக் கொண்டு இருக்கும் துர்க்காவே அர்ஜுன் காரை லாரியில் மோதி ஆக்சிடென்ட் மாதிரி செய்ய சொல்கிறாள்.
என்னென்னவோ நடந்து
சுப்புலட்சுமியை தான் காதலிச்சு கடைசியாக ஏமாந்த கதையை ஜானுவிடம் அர்ஜுன் சொல்லிக்கொண்டு இருக்கான்.என் வாழக்கையில் இப்படி என்னென்னவோ நடந்து என்னை முடக்கிப் போட்டுருச்சு ஜானு. அப்புறம்தான் நீ வந்தேன்னு சொல்றான் அர்ஜுன். நீங்க அன்னிக்கு கோபப்படாம இருந்திருக்கணும் சார்னு ஜானு சொல்றா.
நான் செய்தது
இது விபத்துன்னு நினைச்சுகிட்டு இருக்கியா... மீனாட்சி அம்மாவை கதற கதற அழ வைக்கணும்னு நான் ஏற்பாடு செய்த விபத்துடான்னு துர்கா சொல்லிக்கறா. தூங்கிகிட்டு இருந்த புருஷனை எழுப்பி, ஏங்க அந்த சுப்பு லட்சுமி கதை என்னாச்சு.அதை வச்சு மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்க போறேன்னு சொல்றா துர்கா.