Aranmanai Kili Serial: வெள்ளி கொலுசு மணி...ஜானுவுக்கு கொடுப்பினை இல்லையா?
சென்னை: ஜானு அர்ஜுன் உதாரண ஜோடி மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள் விவாகரத்து என்கிற பிரச்னை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
ஜானுதான் உங்களை பிரிஞ்சாலும், உங்க நினைப்புலதான் சார் நான் வாழுவேன்னு சொல்லிகிட்டு இருக்கா. அர்ஜுன், தன்னை பிரிஞ்சால் ஜானு இன்னும் நல்லா வாழ்வா.
கால் நடக்க முடியாத தன்னிடம் அவள் மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதை விட ,அவளுக்கு நாமே நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர்றது நல்லதுன்னு நினைக்கிறான் அர்ஜுன்.
கொலுசு ஜானுவுக்கு
ஜானுவுக்கு ஆசையாக கொலுசு வாங்கிட்டு வந்து தர்றான் அர்ஜுன். ரொம்ப பிடிச்சு இருக்கு சார்.. நிஜமா என்னக்காக நீங்களே வாங்கினீங்களா சார்னு கேட்கிறாள்.ஆமாம் ஜானு நானே உனக்காக செலக்ட் பண்ணினேன்னு சொல்றான் அர்ஜுன்.என்னால நம்பவே முடியலை சார்.. இவ்ளோ அழகான டிசைன் செலக்ட் பண்ணி இருக்கீங்கன்னு குதூகலிக்கிறாள் ஜானு.
ஜானு கொலுசு
ஜானு உன் காலை காமி ஜானு நானே உன் காலுக்கு கொலுசை போட்டு விடறேன்னு சொல்றான். வேணாம் சார்..என்கிட்டே குடுங்க நானே போட்டுக்கிட்டு வந்து உங்ககிட்ட காமிக்கறேன்னு சொல்றா.என்ன ஜானு எல்லாரும் புருஷன்தான் தனக்கு கொலுசை மாட்டிவிடணும்னு ஆசைப்படுவாங்க.காமி ஜானு நானே போட்டு விடறேன்னு சொல்றான்.
நானே போட்டு
இல்லை சார் நானே போட்டுக்கிட்டு வந்து காமிக்கறேன்னு ஜானு சொல்ல, இல்லை நான் விட மாட்டேன்.நான்தான் உனக்கு போட்டுவிடுவேன் என்று அடம் பிடிக்கிறான் அர்ஜுன். ஜானு பிடிவாதமாக வேணாம் சார் நானே போட்டுக்கறேன்னு சொல்றா.
ஆசை இல்லையா?
அவளுக்கு மட்டும் புருஷன் கையால் கொலுசு போட்டுக்க ஆசை இருக்காதா என்ன, ஆனால், அவள் காலில்தான் ஆலகால விஷம் கொண்ட நாகம் வந்து கடித்து விஷத்தை கக்கிவிட்டுப் போயிருக்கிறதே. அதனால் ஒரு மாதத்துக்குள் விஷம் உடல் முழுக்க பரவி, உயிர் போகும் அபாயத்தில் இருக்கிறாள். இப்போதே கால் ஊதா நிறத்தில் மாறி வருகிறது.அந்த காலை எப்படி அவள் அர்ஜுனிடம் காண்பிப்பாள்?