அரண்மனைக் கிளி நடிகையைப் பார்த்து.. அப்படியே ஜிவ் ஆன ரசிகர்கள்!
சென்னை: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் நாடே ஸ்தம்பித்து போயிருக்கும் நிலையில் பல மக்களின் வாழ்க்கையையும் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது .
அது சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையில் உள்ளவர்களையும் விட்டுவைக்கவில்லை. தற்போது கூட பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் உட்பட பல அரசியல் தலைவர்களும் இதற்கு பலியாகி இருக்கிறார்கள்.
அந்தவகையில் இதிலிருந்து குண மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் அரண்மனைக்கிளி சீரியல் ஜானு ஆக நடித்துக்கொண்டிருந்த மோனிஷா குணமாகி வந்துள்ளார்.
ஹேப்பி
இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறதாம் .இருந்தாலும் தற்போது இவர் நடித்திருக்கும் போட்டோசூட் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியல் இந்த லாக் டவுன் காலகட்டங்களில் சூட்டிங் எதுவும் நடைபெறாததால் அப்படியே முடித்து விட்டார்கள் .இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த மோனிஷா ரசிகர்கள் மனதில் ஜானுவாகவே வாழ்ந்து விட்டார்.
அழகிய தமிழும்
இவருடைய அழகையும் அழகான தமிழ் பேசும் உச்சரிப்பிலும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது .அது மட்டுமல்லாமல் அமைதியின் சொரூபமாக அவருடைய மாமியார் வீட்டுக்கு கணவருக்கு செய்யும் சேவையும் பார்த்து பலர் இவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தனர். ஆனால் தொடர்ந்து இந்த சீரியலில் இவரை காணாது இந்த சீரியல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் .அந்த நிலையில் தான் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வந்து கொண்டிருந்தார்.
கொரோனா
அப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு லைவில் வந்து தான் மலையாள சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் விரைவில் தமிழில் வருவேன் என்றும் கூறியிருந்தார் .அதுவும் இந்த சீரியல் மூலமாக ஜானு அர்ஜுனனாக நடித்து ரொம்ப பிரபலமானதால் அதே கதாநாயகனோடு நடிப்பேன் என்று கூறியிருந்தார். லைவ்வில் வந்து பேசி ஒரு வாரத்திற்குள் இவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொரோனா பிரேக்
இவருக்கு மட்டும் அல்லாமல் இவர் புதியதாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சீரியலில் இவருடன் நடித்த நடிகர்களுக்கும் பலருக்கு இரு ப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது. அதை தொடர்ந்து இவர் கொஞ்ச நாட்கள் இன்ஸ்டாகிராமில் தலைகாட்டாமல் இருந்தார். ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போ மீண்டும் ஃபோட்டோஷூட்டை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த முதல் போட்டோ ஷூட் சேலையில் சொட்ட சொட்ட மழையில் நனைந்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். அவருடைய போட்டோவை மீண்டும் பார்த்ததால் அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மழையில் நனைந்து
அதுமட்டுமல்லாமல் மீண்டும் தற்போது ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் அந்த போட்டோவில் இவரை பார்த்ததும் இவருடைய அழகை வர்ணித்து பல ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இவருக்கு எப்பவுமே பிளஸ் பாயிண்டாக இவருடைய சிரிப்பும் நீண்ட தலைமுடியும் அமைந்திருப்பதால் பலரும் இந்த தலைமுடியை சீக்ரெட் என்ன என்று கேட்டு கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள் .
அம்மாவின் கிப்ட்
அவர் அதற்கு சிரித்தபடியே இது எங்க அம்மா எனக்கு கொடுத்த கிப்ட் என்று சமாளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சிரிப்பையும் தலைமுடியையும் இரண்டையும் காட்டி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரியும் குட்டியூண்டு இடுப்பை பற்றி பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்