For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Aranmanai Kili Serial: என்ன கொடுமை இது.. ரத்தத்தின் நிறம் சிவப்பு இல்லையா?

Google Oneindia Tamil News

சென்னை: வர வர சீரியல்களில் லாஜிக் இருப்பதில்லை. சரி அதுதான் போகட்டும் விட்டு விடலாம் என்று பார்த்தால் மேஜிக் நடக்கிறது. இதை மக்கள் ரசித்து பார்க்கிறார்கள் எனும்போது மேஜிக் நடந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

சித்தர்கள் சிவ பக்தர்களாக இன்றும் இருக்கிறார்கள். காசி, திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் மட்டும் இல்லாமல் சில மனிதர்களுக்கும் அன்றாட வாழ்வில், ஏதோ ஒரு வகையில் வந்து போயுள்ளதாக கூற கேள்விப் பட்டும் இருப்போம்.

இதனால் மட்டும் அல்லாமல், தெய்வ பக்தி, வாழும் சாமியர்கள் மீது பற்று கொண்டவர்கள் மேஜிக் போன்ற காட்சிகள் சினிமாவிலோ, சீரியலிலோ வந்தால் தங்களுக்குள் கூட கேள்வி கேட்காமல் ரசித்து பார்க்கிறார்கள்.

அரண்மனை கிளி

அரண்மனை கிளி

விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் சித்தர் ஒருவர் வருகிறார். என் உயிரை எடுத்துக்கோ, என் புருஷன் உயிரை காப்பாத்துன்னு சொல்லித்தானே வாசுகி அம்மா பாம்பிடம் வந்து பூஜை செய்தே.. இப்போ உன் புருஷன் நடக்க ஆரம்பிச்சத்தும் மறந்துட்டியான்னு ஜானுவிடம் சித்தர் மிரட்டறார்.

நல்லா நடக்கட்டுமே

நல்லா நடக்கட்டுமே

இல்லை சாமி என் புருஷன் நல்லா நடக்கட்டுமேன்னு இருந்தேன்.நான் மறக்கலைன்னு ஜானு சொல்ல, நீ நடக்கணும்னு தான் வேண்டிக்கிட்டே..நல்லா நடக்கணும்னு வேண்டிக்கலைன்னு சித்தர் மீண்டும் மிரட்டறார்.போகும் இடமெல்லாம் வந்து, வா வான்னு கூப்பிடறார்.

சித்தருடன் ஜானு

சித்தருடன் ஜானு

ஜானுவும் சித்தருடன் போக, அங்கு வனத்தில் ஒரு சிவன் சிலை. அதன் அருகில் நின்று இப்போது உன்னை ஒரு நாகம் சிவனின் ஆலகால விஷத்துடன் வந்து உன்னைத் தீண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உன்னுள் விஷம் இறங்கி, முப்பதாவது நாள் உன் உயிர் போகும்.அதற்கு முன் நீ இங்கு வந்துவிடு என்று கட்டளையிடுகிறார்.

தீண்டுகிறது பாம்பு

தீண்டுகிறது பாம்பு

சொன்னபடி ஜானு கண்மூடி நிற்க, ஒரு நாகம் அவனது காலை தீண்டிவிட்டு செல்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடலில் விஷம் ஏறுவதை, முதலில் நகம் ஊதா நிறத்தில் மாறுவதாக காண்பித்து இருக்காங்க. அதை நெயில் பாலீஸ் என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

ரத்தம் சோதனை

ரத்தம் சோதனை

ஜானுவுக்கு ஜுரம் வந்து ஆஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போறா விஜயா .அங்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல, ஜானு மாட்டேன் என்று சொல்கிறாள்.. விஜயாவின் பிடிவாதத்தால் ரத்த பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டாலும்,தானே தனது கையை குத்திப் பார்க்க

நிஜமா ரத்தம் ஊதா நிறத்தில் இருக்குதுங்க. இது சிவனின் ஆலகால விஷமாம்! சொல்வதற்கு ஒன்றுமில்லை!

English summary
There is no logic in the upcoming serials. Well that's the magic that happens when you let it go. When people see this, they have to accept the magic happens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X