Aranmanai Kili Serial: இதுக்குத்தான் புருஷனோட முன்னாள் காதலி கதை கேட்க கூடாது!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் கணவன் அர்ஜுனின் முன்னாள் காதலி சுப்பு லட்சுமிபற்றி விஜயா ஜானுவிடம் கூறியதும் ஒரு விதத்தில் நல்லதுதான் போலும். கதை கேட்டுக் கொண்டு இருந்த ஜானுவுக்கு பொஸசிவ் வந்துருது.
விஜயா சுப்புலட்சுமி, அர்ஜுன் காதல் விஷயம்பற்றி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஜானுவிடம் கதை சொல்லிக் கொண்டு இருந்தாள். ஜானுவும் கதையை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.
கதை லவ் சீன் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டு இருக்க, இப்போதுதான் போதும்க்கா அர்ஜுன் சார் இப்படி எல்லாமா சுப்பு லட்சுமியை காதலிச்சு இருக்காரா? என்னால தாங்கிக்க முடியலேன்னு சொல்லிட்டு போறா.
Tamil selvi serial: சரவணன் செத்துருவானா? தமிழ்செல்விக்கு அமுதனா?
அர்ஜுனை ஜானு
பார்த்தியா உனக்கும் பொஸசிவ் வந்துருச்சு. நீ அர்ஜுனை லவ் பண்றே தானேன்னு விஜயா கேட்க... எனக்கு சுப்பு மேல பொறாமையா இருக்குக்கான்னு சொல்றா ஜானு. இதைத்தாண்டி நானும் எதிர்பார்த்தேன்.எத்தனை நாளைக்குத்தான் அர்ஜுன் மேல இருக்கற காதலை மறைச்சுக்கிட்டு வாழ்த்துகிட்டு இருப்பேன்னு தனக்குத்தானே பேசிக்கறா விஜயா.
அதிகம் நான்தான்
அர்ஜுன் போட்டோவை எடுத்து கையில் வச்சுக்கிட்டு, என்ன சார் நீங்க சுப்பு லட்சுமியை இவ்ளோ ஆழமா காதலிச்சு இருக்கீங்க.அதை விட உங்களை நான் ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். அதை ஏன் சார் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்கன்னு சொல்லி அழறா. இதுவரைக்கும் தியாகி மாதிரி இருந்த ஜானுவின் உண்மையான மனசை வெளியில் கொண்டு வந்தது விஜயாதான்.
அர்ஜுன் சுப்பு
ஜானு கோவத்தில் ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த அத்தனை சாமான்களையும் தள்ளிவிட்டுட்டு அழறா. அங்கு வந்த அர்ஜுன்., ஜானு விஜயா சுப்புலட்சுமி பத்தி உன்கிட்டே ஏதாவது பேசினாளான்னு கேட்கறான்.ஜானு பேசாமலிருக்க, சொல்லு ஜானுன்னு மறுபடியும் கேட்க இவள் ஒண்ணும் இல்லை சார்னு சொல்லி மழுப்பறா .
விஷயம் ரெண்டு
கணவனோ மனைவியோ தன்னோட முன்னாள் காதலி, அல்லது காதலன் பற்றி கூறுகையில் , அது நேர்மறையாகவும் மாற வாய்ப்பு இருக்கு. எதிர் மறையாக மாறி குடும்ப அமைப்பே சீர் குலையவும் வாய்ப்பு இருக்கு..அதனால், குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை என்பது மிகமிக முக்கியம். இதைத்தான் உணர்த்துவதாக இருக்கிறது இந்த சீரியல்.