For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Aranmanai Kili Serial: மானுட உயிரை காணிக்கையாக கொடுத்தால் தெய்வம் ஏற்குமா?

Google Oneindia Tamil News

சென்னை: கதைப்படியே என்றாலும் மானுட உயிரை வேண்டுதலுக்கு காணிக்கையாக கொடுத்தால் தெய்வம் ஏற்குமா என்று அரண்மனை கிளி சீரியலில் பார்க்கலாம்.

விஐய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானு தனது புருஷன் அர்ஜுன் எழுந்து நடந்தால் தனது உயிரை காணிக்கையாகத் தருவதாக வேண்டுதல் வைக்கிறாள்.

வேண்டுதலை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக சித்தரே வந்து அழைக்கிறார். ஜானுவை பிரிய மனம் இன்றி தெய்வத்துடன் போராடி உன் உயிரை மீட்பேன் என்று அர்ஜுன் கண்ணீர் விடுகிறான்.

குரல் ஒலி மூலம்

குரல் ஒலி மூலம்

விஜய் டிவியில் அரண்மனை கிளி சீரியல் ஒளிபரப்ப படும்போது, நடுவில் பொறுப்பு துறப்பு என்று வாய்ஸ் பேசியே ஒலிபரப்புகிறார்கள். அதில், இந்தியா கற்பனை வளம் மிக்க நாட்டுப்புற மற்றும் பல்வேறு கதைகளை கொண்ட நாடு. இதன் நோக்கம் மூட நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்ப்பதோ அல்லது விதைப்பதோ அல்ல.அப்படி பட்ட செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அந்த வாய்ஸில் வருகிறது.

கற்பனை கதைதான்

கற்பனை கதைதான்

அரண்மனை கிளி சீரியல் கற்பனை கதையே ஆனாலும், தெய்வத்துடன் போராட முடியாது சார் என்று ஜானு அர்ஜுனிடம் கூறுகிறாள், நான் வாதாடுவேன்.. உன் உயிரை காப்பேன் ஜானு என்று கூடவே வருகிறான் அர்ஜுன். சித்தரோ வாதாட இது ஒன்றும் கோர்ட் இல்லை.கோயில் என்று கூறுகிறார்.

ஏற்குமா தெய்வம்

ஏற்குமா தெய்வம்

கற்பனை கதை என்றாகிவிட்டது. என்றாலும், மானுட உயிரை காணிக்கையாக கொடுத்தால் தெய்வம் ஏற்குமா என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டு, சீரியலைப் பார்க்கத் தூண்டுகிறது.

இதுதான் விதி

இதுதான் விதி

என்னை இழந்து நீங்க்க வாழப் பபழகணும் சார்... இதுதான் விதி என்று ஜானு கணவனைத் தேற்றுகிறாள். உடனே வந்து சேர் என்று சித்தர் ஆணையிடுகிறார். நானும் உடன் வருகிறேன் என்று அர்ஜுன் கேட்க, கூடாது..யார் வேண்டுதல் வைத்து இருக்கின்றாரோ அவர் மட்டுமே அழைக்கும்போது வர வேண்டும் என்று சித்தர் கட்டளை இடுகிறார்.

அர்ஜுனும் ஜானுவும் மாறி மாறி அழுது கொண்டே இருக்க... என்ன நடக்குது என்று பார்க்கலாம்.

English summary
In the aranmanai kili , you can see whether the deity will accept the offer of human life as a tribute to the story. At the vijay TV's aranmanai kili p Serial, Janu demands that her husband Arjun give her life as a walk. Siddhar invites that the time has come to fulfill the request. Arjun tears that he will save your life by fighting with the deity without pleasing Janu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X