Ayudha Ezhuthu Serial: படிச்ச பொண்ணு இப்படியும் இருப்பாய்ங்களா?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலக்டரா இருக்கற ஒரு பொண்ணு படிச்ச பையன்னு சக்தியை காதலிச்சு கடைசி வரைக்கும் கிராமத்து ரவுடி காளி அம்மா பையன் அவன்னு தெரியாமலே ஏமாந்து போகுது.
குறுகிய கிராமத்தில் இப்படியும் ஒரு சப் கலெக்டர் ஏமாந்து போவாங்களான்னு இருக்குது.
இவ்ளோ நடந்தும் ஒண்ணுமே நடக்காது போல ஏமாத்தின சக்தி இன்னும் லவ் லெட்டர் எழுதிக்கிட்டு திரியறது வேடிக்கையா இருக்குது.
இந்திரா சக்தி
சப் கலெக்டர் இந்திரா அந்த ஊருக்குள் பதவி ஏற்று வந்த உடனே சக்தி அவளை காதலிக்க ஆரம்பிச்சுடறான். சக்தி இந்திராவுக்கு எதிரான காரியங்களை அந்த ஊரில் செய்யும் ரவுடி காளி அம்மாவின் மகன் என்கிற உண்மையை மறைக்கிறான்.தான் படிக்காதவன் என்கிற உண்மையை மறைக்கிறான்.
லண்டன் ரிட்டர்ன்
சக்தி தான் லண்டன் ரிட்டர்ன் என்றும், லண்டனில் எம்பிஏ படித்தவன் என்றும் பொய் பேசுவதை கூட ஒரு சப் கலெக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை கூட மன்னித்து விடலாம். சக்தி காளி அம்மாவின் மகன் என்பதை கூட கல்யாணம் முடியும் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இவர் என்ன சப் கலெக்டர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
கல்யாணம் செய்து
சக்திக்கு இந்திராவை ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டு விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் என்று லவ் லெட்டர் எழுதுவதும், இதில் மானே தேனே போடலையா என்று காமெடி செய்வது என்பதும் வேடிக்கையாக இருக்கிறது.
அம்மா ஆட்டுவிக்க
ஒரு சப் கலெக்டரை அம்மா ஆட்டுவிக்கறாங்க என்பது கூட வேண்டாம். தனது மனைவியை அம்மா தனது இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கறாங்க. அதாவது காளி அம்மா மருமகள் இந்திரா பாலில் விஷத்தை கலந்துட்டா என்று பொய் சொல்றாங்க. அதை நிரூபிக்க விரதம் இரு கோயிலில் காப்பு கட்டிக்கோ, மடி பிச்சை எடு.. பொங்கல் வைன்னு சொல்றாங்க..
இவன் என்னடான்னா லவ் லெட்டர் எழுதிக்கிட்டு நிக்கறான்.. ஓ.. லெட்டர்ல மானே தேனேன்னு போடலையான்னு கேட்கறான்.. என்ன கதைடா சாமி?!