Aranmanai Kili Serial: காதலிக்கு பெப்பே... அம்மாவுக்கு பும் சிக்கு பம்!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியல் கதை நம்ம கொள்ளுப் பாட்டி காலத்து கதைதான். 1960 களில் வந்து இருக்க வேண்டிய கதை. ஒருவேளை அப்போது ஒரு படமாக கூட இந்த கதை வந்து இருக்கலாம்.
கால் நடக்க முடியாத பெரும் பணக்காரன் அர்ஜுனை புருஷனாக அடைந்து, அவனை ஆசையாக அன்பாக கவனித்துக் கொள்ளும் ஏழை மனைவி ஜானு. அவனை நடக்க வைக்க விடா முயற்சி செய்துகொண்டு இருக்காள்
இந்த சமயத்தில்தான் ஜானுவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து, அதற்கான நாளும் நெருங்கிக் கொண்டே வருகிறது.
அடுத்து அருண்
முதலில் மீனாட்சி அம்மா தனது மகன் அர்ஜுனுக்கு நிச்சயித்த பெண்தான் ரேணுகா. ஆனால், நடக்க முடியாத அர்ஜுனை கல்யாணம் செய்துக்கப் பிடிக்கமல் மண்டபத்தை விட்டு ஓடிவிடுகிறாள். இந்த கல்யாணம் நடந்தால்தான் கவுரவம் என்று எண்ணிய மீனாட்சி அம்மா ரேணுகாவுக்கு பதிலகா அவளது தங்கை ஜானுவை கல்யாணம் செய்து வச்சுடறாங்க. அதனால்தான் இப்போது விவாகரத்து வரை வந்து இருக்கிறது.
பழிக்குப் பழி
ரேணுகா ஒரு இக்கட்டில் மாட்டிக் கொள்ள,அவளை தனக்கு யாருன்னு தெரியாது என்று சொல்லிடறாங்க மீனாட்சி அம்மா, விளைவு, ரேணுகா போலீசில் மாட்டிக்கறா. இப்போது ஊருக்கே பெரிய தொழிலதிபரான மீனாட்சி அம்மாவின் இரண்டாவது பிள்ளை அருணை காதலிக்கற மாதிரி நடிச்சு,அவனை கல்யாணம் செய்துக்கிட்டு, மீனாட்சி அம்மாவை பழி வாங்க ரேணுகா நினைக்கிறாள்.
ஆனால் கல்யாணம்
மீனாட்சி அம்மாவின் இளைய மகன், அர்ஜுனின் தம்பி அருணை காதலிப்பது போல நடிக்கிறாள், அவனும் உண்மை என்று நம்பி தனது முறைப் பெண்ணை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து இருக்க, இவன் ரேணுகாவுடன் ஓடிவிட திட்டமிடுகிறான். அவளுடன் வெளி நாடு போயி வாழப்போகிறேன் என்று மீனாட்சி அம்மாவிடம் சொல்ல, அவங்க கையில் துப்பாக்கி.
மிரட்சியில் அனைவரும்
அனைவரும் அருணைத்தான் சுட்டு விட போகிறார்கள் என்று மிரட்சியிலிருக்க, அதை அருண் தலையிலிருந்து எடுத்து, மீனாட்சி அம்மா துப்பாக்கியை தனது நெற்றியில் வச்சுக்கறாங்க.. பயந்து நிக்கிறாங்க அனைவரும். இந்த கல்யாணத்தை நடத்திக்கறதா இருந்தால் இப்பவே கிளம்பிரு. நான் செத்து போயிட்டேன்னு பத்து நிமிஷத்துல செய்தி வந்தா என்னைப் பார்க்க வராதேன்னு சொல்றாங்க.
இவங்களுக்கு மட்டுமெப்படி துப்பாக்கி உடனே கிடைக்குது? இப்போது காதலிக்கு பெப்பே..அம்மாவுக்கு சத்தியம்!