அட.. இப்போ அருந்ததி பேய் சண்முகம் உடம்புக்குள்ளயா... கதை சூடு பிடிக்குதே...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி திகில் சீரியல் இன்னும் முக்கியமான கட்டத்தை எட்டவில்லை. கதையின் ஆரம்பம்தான் இன்னும் நீடிக்குது.
கிணற்றில் இருந்த அருந்ததி பேய் வெளியில வரத்துக்கு சுலேகாவும், சண்முகமும்தான் காரணம்.
சுலேகா சண்முகத்தின் காதலி.ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்க அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துருக்காங்க.
அப்பா நீங்க படகுப் போட்டியில் ஜெயிச்சே ஆகணும்... வீர மகளின் ஆசை!
சுலேகா சண்முகம்
விமான நிலையத்தில் இருந்து பைக்கில் வீட்டுக்கு வரும்போது கிணற்றில் என்னவோ இருக்குது பார்க்கலாம் வா சண்முகம்னு சுலேகா கூப்பிட, சண்முகமும் போயி, கேட்டைத் திறந்து தீய சக்தியின் ஆவியின் கட்டை அவிழ்த்து விட்டுடறான்.
காப்பு ருத்திராட்சத்தில்
ஈஸ்வரி அமமா குடும்பத்தினரை தீய சக்தி அண்டாமலிருக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ருத்திராட்ச காப்பு அணிந்திருக்க வேண்டும். அதனாலே சுலேகாவுக்கும் அந்த காப்பை போட்டுவிட அவளுக்கு அது பிடிக்கலை.
சூனியக்காரி
செம் கோவத்தில் இருக்கும் சுலேகா, ஈஸ்வரி அம்மாவை அதாவது தான் காதலிக்கும் சண்முகத்தின் அம்மாவை சூனியக்காரின்னு அமெரிக்காவுக்கு கிளம்பிடறா.
அம்மா நம்பூதிரி
உங்க குடும்பம் நல்லா இருக்கணும்னா தெய்வானையை சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைக்க நம்பூதிரி அம்மா சொல்றாங்க. தெய்வானை முதலில் சம்மதிக்கலேன்னாலும், பிறகு சம்மதிக்கறா.
சண்முகத்துக்கு கோபம்
தெய்வானையை சண்முகத்துக்கு பிரேக்ஃபாஸ்ட கொடுக்க ஈஸ்வரி அம்மா அனுப்ப, அவன் கோபத்தில் தட்டிவிட்டுடறான். தெய்வானை அழுதுகிட்டே போயிடறா. சண்முகமும் சுலேகாவை ரொம்ப காதலிச்சேன்.. எப்படிம்மா நான் தெய்வானையை கல்யாணம் செய்துக்க முடியும்னு கேட்கறான்.
வீசிடறான் காப்பை
மனசு சரியில்லாமல் வெளியில் போன சண்முகம் கோபத்தில் கையில் இருந்த காப்பை கழட்டி வீசிடறான். அப்புறம் என்ன,அந்த வீட்டு ஆண்களை பழி வாங்க காத்திருக்கும் அருந்ததி பேய் சண்முகத்தின் உடலினுள் புகுந்துருது...
பேஷ்..பேஷ்.. கதை இப்போத்தான் சூடு பிடிக்குது...