Arundhathi Serial: பார்க்க பார்க்க சிரிப்பு வருது...அடக்க முடியல!
சென்னை: அருந்ததி சீரியலில் தெய்வானையின் கணவன்,சண்முகத்தை தெய்வானையை ஏமாற்றி கல்யாணம் செய்துக் கொண்டு இருப்பவள் அருந்ததி பேய்.
என்னவோ,அவன் தெய்வானையிடம் பேசும்போது எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டி கூட பேசிகிட்டு இருக்கியே வெட்கமா இல்லைன்னு கேட்கிறாள்.
இப்படி இவளுக்கு பயந்து சண்முகமும், தெய்வானையும் பேசிக் கொள்வதே இல்லை. பேசினாலே தெய்வானைக்கு சோதனை தந்து விடுகிறாள்.அவளுக்கு கொடூரமான கஷ்டமும் கொடுத்து விடுகிறாள்
வீட்டை விட்டு போ
Roja serial: ரோஜா.. இடம் இல்லேன்னா மாமன் மடி இருக்குல்ல உட்காரு!
தெய்வானை உனக்கு கொடுத்த கெடு முடிஞ்சு போச்சு. இனியும் நீ இந்த வீட்டில் இருக்க கூடாது. இன்னிக்கே இப்பவே நீ வீட்டை விட்டு போயிருன்னு சொல்லி, அவளை அடித்து, துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியில் போக வச்சுட்டா.. அவளும் தனது கணவனின் போட்டோவை மட்டும் எடுத்துக்கிட்டு கிளம்பறா.
தடுத்த அருந்ததி
தெய்வானையை பார்க்க போறே...எனக்குத் தெரியும். நீ அவளை பார்க்க போக கூடாதுன்னு அருந்ததி எவ்ளோ தடுத்தும், சண்முகம் தன்னை கத்திரிக் கோலால் வெட்டிக்க துவங்க, கத்திரிக்கோலை பிடுங்கி விடுகிறாள் அருந்ததி. இந்த அளவுக்கு பாசம் வச்சு இருக்கியா. இரு உன்னக்கு என்ன செய்யறேன்னு சொல்லிட்டு பின்னால் வருகிறாள் அருந்ததி.
மற்றவன் பொண்டாட்டி
சண்முகம் ரூமுக்குள்ள தெய்வானை கூட என்ன செய்துகிட்டு இருக்கே..தெய்வானை அடுத்தவன் பொண்டாட்டி. நான்தான் உனக்கு பொண்டாட்டி . அவ கூட என்ன உனக்கு இவ்ளோ நேரம் பேச்சுன்னு அருந்ததி கத்துகிறாள். இவளை என்ன செய்வது தெய்வானை? நீ அடுத்தவன் பொண்டாட்டியும்.. இப்படி ஆட்டுவிக்கிறாளே..இதுக்கு முடிவுதான் என்னன்னு கேட்கிறான் சண்முகம்.
வழி இருக்கு
ஒரே வழித்தாங்க இருக்கு.நீங்க அவளை காதலிக்கிற மாதிரி நடிங்க.அவளை சீரழிச்சவனையே இந்நும் நாம் கண்டுபிடிக்கலை.கண்டு பிடிச்சுட்டா அவ ஆத்மா சாந்தி அடைஞ்சுரும். அதை செய்வோம்ங்க, இப்பவே போயி அவளை காதலிக்கறதா சொல்லுங்கன்னு சொல்றா.
என்ன அதிசாயம் பாருங்க யோசனை ஒர்க் அவுட் ஆயிருச்சு. கொண்டாட்டத்தில் குஷியால் குதிக்கிறாள் அருந்ததி. இதை பார்க்க பார்க்க சிரிப்பு வருமா வராதா?