Arundhathi Serial: பேய்க்கும் மனுஷனுக்கு கல்யாணமாம்...அதை ஊரே பார்க்க முடியாதாம்!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் இப்போது சண்முகத்தின் சித்தி என்று நடிகை தேவிப்பிரியா வந்து இருக்கார். இவரிடம் ஏதோ ரகசியம் ஒளிந்து கிடக்கிறது.
அருந்ததி ஒரு பத்திரிகை நிருபராக வேலை பார்த்து வந்தவள்.அப்படி இருக்கையில் ஜமீன் வீட்டில் சிலை திருடி வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கண்டு பிடிச்சுடறா.
இதை தெரிஞ்சுக்கிட்ட ஜமீன் குடும்பத்தை சேர்ந்த ஒருவன் அருந்ததியை நாசம் செய்ய. எல்லாரும் சேர்ந்து அவளை கிணற்றில் தள்ளி சாகடிச்சுடறாங்க
Roja serial: அது ஜெயிக்கற கூட்டணி இல்லை அதான் அணி தாவிட்டேன்.. கலக்கல்!
அருந்ததி ஆவியாக
அப்போது இருந்தே கிணற்றில் அடைப்பட்டு கிடந்த அருந்ததி ஆவி, அமெரிக்காவில் இருந்து வந்த சண்முகத்தால் வெளியில் வந்து, அவனது உடம்பில் முதலில் புகுந்து ஆட்டுவிக்குது.பின்னர் தெய்வ சக்தி நிறைந்த தெய்வானையை சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைக்க, அருந்ததி, தெய்வானையுடன் சேர்ந்து தோழி ஆகிடறா.
உதவும் தெய்வானை
அருந்ததியை நாசம் செய்த அந்த முகமூடி போட்டவன் யாருன்னு கண்டுபிடிக்க உதவி செய்யறா தெய்வானை.சண்முகமும் கூட சேர்ந்து இப்போது அருந்ததி பேய்க்கு உதவி செய்யறான். ஒரு நாள் அருந்ததியின் ஆவிக்கு ஆபத்து வர இருக்க, அதில் இருந்து தனது உடலை கொடுத்து அவளை விடுவிக்கிறாள் தெய்வானை.
ரொமான்ஸ் சண்முகம்
இந்த விஷயம் தெரியாத சண்முகம், அவளுடன் ரொமான்ஸ் செய்கிறான். இதில் மயங்கிப் போன அருந்ததி, தெய்வானையை ஏமாற்றி சண்முகத்தை அடைய திட்டம் போடுகிறாள். தனக்கு எல்லாப் பெண்களையும் போல கல்யாணம் செய்துகிட்டா தனது ஆத்மா சாந்தியடைந்துடும்னு சொல்றா. உன் புருஷன்தான் இதுக்கு சம்மதிபான் என்றும் சொல்லித் தர்றா.
ஆவிகூட கல்யாணமா?
என்னதெய்வானை சொல்றே...ஆவி கூட கல்யாணமா? மயக்கமா வருது...ஆவி கழுத்துல எப்படி தாலி கட்ட முடியும்? யாரு மந்திரம் சொல்லுவாங்க? ஆவி எனக்கு இன்னொரு பொண்டாட்டியா...உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியலையா தெய்வானைன்னு கேட்கறான்.
பாவம் அருந்ததியும் ஒரு பொண்ணுதானே அவளுக்கும் தாலி கட்டிக்கணும்னு ஆசை இருக்காதா..தாலி கட்டினவுடனே அவ ஆத்மா சார்த்தி அடைஞ்சுரும்ங்க..அப்புறம் நாம் நிம்மதியா ஹனிமூன் போகலாம்னு சொல்றா.
முதன் முறையா ஆவிக்கும், மனுஷனுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது!