For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Arundhathi Serial: ஆவிக்கு படையல் போடலாம்... அதுக்காக புருஷனையுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலை பேசாமல் சுட்டி டிவிக்கு மாத்திடலாம். அப்படி ஒரு சிறு பிள்ளைத்தனமான கதை.குழந்தைகள்கூட இதை விரும்பிப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.

பேய்க்கும் பேய்க்கும் சண்டை..அதை ஊரே வேடிக்கை பார்க்குது... தலை ஃபுல்லா முடியை வச்சுக்கிட்டு, மொட்டை சிவா கெட்ட சிவான்னு சொல்றியே..இப்படிப்பட்ட பேய் காமெடிகள்தான் சிறுவர்கள் கூட விரும்பிப் பார்ப்பது.

அருந்ததி கதையின் கான்செப்ட் என்னனு தெரியாமல் கூட இயக்குநர் காலை வச்சுட்டார் போலும்.கதை இத்திசை,அத்திசை என்று இல்லாமல் எல்லாத் திசையிலும் பயனிக்குது.

Kanmani Serial: என்னாது முத்துச்செல்விக்கு கல்யாணம் ஆயிருச்சா? Kanmani Serial: என்னாது முத்துச்செல்விக்கு கல்யாணம் ஆயிருச்சா?

ஆவியின் நியாயம்

ஆவியின் நியாயம்

அருந்ததி ஒரு ஜர்னலிஸ்ட்..இவள் ஜமீன் வீட்டின் சிலை கடத்தலை கண்டுபிடித்து விட, அவளை அந்த வீட்டு பையனே சீரழித்து கிணற்றில் தள்ளி சாகடிச்சுடறான். இப்போது அவள் ஆவியாகி அவனை பழிவாங்க அலைகிறாள். யார் தன்னை இந்த மந்திரக் கட்டுக்களில் இருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில், சண்முகம் தன் காதலியுடன் வந்து ஆவியை விடுவிக்கிறான் .அவனுக்கு தெரியாமலே.

காதலி சண்முகம்

காதலி சண்முகம்

அமெரிக்காவில் இருந்து வந்த சண்முதத்தின் காதலி ,ஆவி, பேய் ,பூதம் என்று பயமுறுத்தும் குடும்பம் எனக்கு வேண்டாம் என்று அமெரிக்காவுக்கே கிளம்பிவிட, முருகனின் பக்தை தெய்வ சக்தி நிறைந்த தெய்வானை என்கிற ஏழைப் பெண்ணை சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அதாவது முருக பக்தையான தெய்வானையை மருமகளாகக் கொண்டு வந்தால் வீட்டில் தீய சக்தி இருக்காது என்பது ஈஸ்வரி அம்மாவின் நம்பிக்கை.

தெய்வானை அருந்ததி

தெய்வானை அருந்ததி

அருந்ததி தெய்வானையின் புருஷன் உடலில் புகுந்துகொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி ஒரு வழியாக தெய்வானையின் அருளாலே அருந்ததி சண்முகத்தை விட்டு விலகிடறா அருந்ததி தெய்வானையின் கண்முன் தோன்றி, தனக்கு இந்த வீட்டில் நடந்த அநீதி கதையை கூறி, அவர்களை பழி வாங்க தெய்வானையின் உதவி வேண்டும் என்று கேட்கிறாள்.தெய்வானையும், கணவன் சண்முகமும் கூட அருந்ததிக்கு உதவி செய்கிறார்கள்.

சண்முகம் ஆவிக்கு

சண்முகம் ஆவிக்கு

அருந்ததி ஆவிக்கு தான் சண்முகத்தை கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக மற்ற பெண்களை போல வாழ வேண்டும் என்று ஆசை வந்துருது. இதை தெய்வானையிடம் கேட்க, அதிர்ந்த தெய்வானை அருந்ததியின் ஆசைக்கு ஒப்புக் கொள்கிறாள். இதுவே ஒரு லூசுத்தனம்...இதற்கு சண்முகம் வேறு ஒப்புக்கொண்டாகனுமே.. அவன் இவளை லூசு லூசு என்று திட்டுகிறான்.ஒரு ஆவியை கல்யாணம் செய்துக்க சொல்றியே இது லூசுத்தனமா தெரியலையான்னு கேட்கிறான்.

ஐயோ...ரொம்ப முடியலைங்க!

English summary
Sun TV's Arundhati Serial is a small child story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X