Arundhathi serial: ஆவிக்கு ஆசை பேராசை கோபம் பொறாமை எல்லாம் வருதே!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் திகில் சீரியல், அருந்ததி பேய் என்று, நிறைய ப்ரோமோ விதவிதமா போட்டு போட்டு ஆர்வத்தை தூண்டி விட்டார்கள்.
அதே போல அருந்ததி சீரியலும், அதிக பேய் சத்தம், அலறல், பயம் எல்லாம் இல்லாமல் ரொம்ப நார்மலா...சாதாரணமா ஒளிபரப்பாகிட்டு வருது.
அருந்ததி ஆவிக்கு கல்யாணம் செய்துக்கணும், குடும்பமா வாழணும், ஹனிமூனுக்கு போகணும்னு ஆசை வந்திருக்கு. இப்படி எல்லாம் ஆசை வருமா ஆவிக்கு என்றும் நினைக்க தோன்றுகிறது.
Bigg Boss 3 Tamil: சாண்டியையே வெறுப்பேற்றிய கவின்.. எல்லாம் லாஸுக்காக!
ஆவியாக அலைவார்களாமே!
ஆசை நிறைவேறாமல் சிறிய வயதில் இறந்தவர்கள், அதுவும் துர் மரணம் அடைந்தவர்கள் ஆவியதாக அலைவார்களாமே அந்த கான்செப்டை கையில் எடுத்து அருந்ததி சீரியலை ஷூட் செய்திருப்பார்கள் போலும். இதற்கு பொருத்தமாக இருக்கிறது. இந்த கதை.
இப்போது காதல்
அருந்ததி தன்னை கெடுத்து கிணற்றில் தள்ளி சாகடிச்ச ஈஸ்வரி குடும்பத்தை சேர்ந்த அந்த ஆல் யார் என்று கண்டு பிடித்து பழி வாங்கத்தான் ஆவியாக வருகிறாள்.அப்போது, நல்லபெண்ணாக இருக்கும் தெய்வானையை தனது தோழியாக்கி அவளிடம் நடந்த உண்மைகளை சொல்லி ,தனக்கு உதவி செய்ய கேட்கிறாள்.
சண்முகம் தெய்வானை
தெய்வானை கணவன் சண்முகத்திடமும் இது பற்றி கூறி, இப்போது அருந்ததிக்கு ஒரு விதத்தில் உதவியும் செய்தாச்சு. ஆனால், மெயின் வில்லனை இன்னும் கண்டு பிடிக்கவில்லை.இந்த நேரத்தில். மெயின் வில்லனான கதிர் அருந்ததி பேயை பாட்டிலில் அடைத்து அழிக்க நினைக்கையில், தெய்வானை தனது உடலைத் தந்து அவளை காப்பாற்றுகிறாள்.
சண்முகம் அருந்ததி
அருந்ததி ஆவி தெய்வானையின் உடலில் இருப்பதை அறியாத சண்முகம், தெய்வானையுடன் காதல் பண்ணும்போது எல்லாம் அருந்ததிக்கு சண்முகம் தனக்கே கிடைக்க வேண்டும் என்று பேராசை எழுகிறது. அவன் தெய்வானையை நெருங்கினாலே கோவம் வருகிறது.ஆத்திரம் வருகிறது.
பொண்டாட்டியிடமே புருஷனை
கடைசியில் சண்முகம் தன்னை கல்யாணம் செய்துக்க வேண்டும்.அந்த கல்யாணத்தை நீதான் செய்துவைக்க வேண்டும் என்று அவனின் பொண்டாட்டி தெய்வானையிடமே கேட்கும் அளவுக்கு துணிந்துவிட்ட அருந்ததி, சண்முகத்தை தான் கல்யாணம் செய்துகிட்டு அவனுடன் ஹனிமூன் போக ஆசைப்படுகிறாள்.