Kanmani Serial: ஆத்தி...முத்துச்செல்விக்கு வேலை வந்துருச்சே!
சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் ஆனதும் முத்துச்செல்விக்கு வேலை இல்லைன்னு நினைச்ச நிலையில் அடி ஆத்தி...இப்போ வேலை வந்துருச்சுங்கோ!
சவுண்டு தேவை இல்லாம சதிகாரர்களிடம் சிக்கி தப்பிக்க தனியா காரை எடுத்துக்கிட்டு போயி விபத்துல மாட்டிக்கிடறா.
வயித்துல உண்டான பிள்ளை விபத்துல கலைஞ்சுட அப்புறம் என்ன இனி பிள்ளை பிறக்காதுன்னு கண்ணனை கூப்பிட்டு டாக்டர் சொல்லிடறாங்க. இப்போ முத்துச்செல்விக்கு வேலை வந்துருச்சா?
செம நடிப்பு
பொண்டாட்டி சவுண்டுக்கு விபத்துன்னு கேள்விப்பட்டு ஓடிப்போய் காப்பாத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்து, காப்பாத்தற வரைக்கும் கண்ணனா நடிக்கும் சஞ்சீவ் நடிப்பில் பின்னி பெடலெடுக்கறார். மனிதர் ஏனோதானோன்னு நடிச்சுட்டு போற இடத்தில் எல்லாம் உயிரைக் குடுத்து நடிப்பதால்தான் இன்னும் ஃபீல்டில் நிலைத்து நிற்கிறார்.
மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுது
ஸாரி மிஸ்டர் கண்ணன் எங்களால் ஒரு உயிரை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சுதுன்னு டாகடர் வந்து சொல்ல அப்போதும் கண்ணன் குழந்தை போனதை நினைச்சு அழுது நடிக்கறார். ஒரு வழியா தேற்றிக் கொண்டு நிற்க, டாக்டர் இன்னொரு குண்டை தூக்கி போடறாங்க.. அதாவது இனிமே சவுண்டுக்கு குழந்தை பிறக்காதுன்னு.
அழும் கண்ணன்
டாக்டர் பொண்டாட்டிக்கு இனி குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்று சொன்னதை கேட்டதும் தேம்பி தேம்பி அழும் கண்ணன், இது சவுண்டுக்கு தெரிய கூடாது என்று டாக்டரிடம் கெஞ்சி கேட்கும்போது நன்றாக நடிச்சு இருக்கார். அதனால்தான் இன்னும் இவரை போன்ற நடிகர்கள் நிலைச்சு இருக்கிறார்கள்.
வேலை வந்துருச்சு
கண்ணனை நினைச்சுகிட்டே காலத்தை தள்ளிடலாம்னு இருக்காளே முத்துச்செல்வி.. இவளுக்கு என்னடா சீரியலில் வேலை இருக்கப் போகுதுன்னு சிலர் நினைச்சு இருந்தாலும், இன்னும் சிலர் சரியா கணக்கு போட்டு இருந்திருப்பாங்க. அதாவது சவுண்டுக்கு குழந்தை எப்படியாவது கலைஞ்சு போகும்.. இனி குழந்தை பிறக்காது என்று டாக்டர்கள் சொல்வார்கள் என்று அப்படியே நடந்து போச்சுங்கோ...