பல குரல் மன்னன் ஜீவா வாத்தியார் குரலில் பட்டையை கிளப்பறாரே...சத்யராஜ் பாராட்டு
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர், பல குரல் மன்னன் ஜீவா வந்திருந்தார்.
பெரியார் படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் குரல் பேசியவர் நடிகர் ஜீவாதானாம். சும்மா டிரையல் பார்த்ததே பட்டையை கிளப்பிட இதுவே போதும்னு சொல்லிட்டாராம் சத்யராஜ்
நடிகர் டெல்லி கணேஷ் மாதிரி பேச சொல்லி அதை மிகவும் கேட்டு ரசித்தார் சத்யராஜ்னும் ஜீவா கூறினார்.
தமிழ்செல்வி சொன்ன பொய் மாமாவுக்கு தெரிஞ்சு போச்சே... என்ன செய்யப்போறா?
குருவி வேகம்
எஸ்.வி.சேகரின் வேகம் படத்தில் தான் ஜீவா அறிமுகம் ஆகி இருக்கார். பிறகு அஜீத்துடன் கிரீடம்,அடுத்து விஜயுடன் குருவி படத்தில் நடித்து இருக்கார்.குருவி படத்தில் நடித்த போது,கிரீடம் படத்தில் நடிச்சு இருக்கீங்க.. பார்த்தேன்.. நல்லா இருந்துச்சு. அஜீத் சார் ஸ்டைல்,வாக் எல்லாமே சூப்பர்னு சொல்லி பாராட்டினாராம். உங்களுக்கு யார் வாய்ஸ் ரொம்ப அசால்டா வரும்னு விஜய் கேட்டாராம். உங்க வாய்ஸ்னு சொன்னதும்.. ஏம்பா... ஷாட் ரெடியாயிருச்சான்னு விளையாட்டா கேட்டாராம்.
ரஜினி அவ்ளோ பிடிக்கும்
நான் சின்ன வயசிலேர்ந்து வெறித்தனமான ரஜினி ரசிகன்.அப்பா, அம்மா முகத்துக்குப் பிறகு மனசில் பதிஞ்சது ரஜினி சார் முகம்தான். குடும்ப போட்டோவில், அண்ணன் எல்லாம் ஸ்டிஃபா நிப்பாங்க. நான் மட்டும் ஸ்டைலா நிப்பேன்.. இல்லை கால் மேல கால் போட்டு ஸ்டைலா உட்கார்ந்து இருப்பேன். அந்த அளவுக்கு எனக்குள்ள ரஜினி சார் தாக்கம் இருந்தது.
சின்ன புக் ரயிலில்
வாய்ப்பு தேடி சென்னைக்கு ரயிலில் வந்துகிட்டு இருந்தேன்.அப்போ செலிபிரிட்டீஸ் போன் நம்பர் இருக்கும் புத்தகம் ஒன்றை ஒருவர் வித்துக்கிட்டு இருந்தார்.நான் அதை வாங்கினேன்.அதில் தலைவர் வீட்டு போன் நம்பருமிருந்துச்சு. ஒரு நாள் போன் பண்ணினேன்..அவர் ஊரிலில்லை வர ரெண்டு மாசம் ஆகும்னு சொன்னாங்க. ரெண்டு மாசம் கழிச்சு போன் செய்தேன்... அப்போதும் அப்படித்தான் சொன்னாங்க.
குரலில் நம்பியாராக
நம்பியார் குரலில் ரஜினி இருக்காரா..நான் நம்பியார் பேசறேன்னு சொன்னேன்...யோவ் போனை வைன்னு சொல்லிட்டு வச்சுட்டாங்கன்னு சொல்லி சிரித்தார். சந்தானம் விஜய் டிவியில லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவுக்கு போயிட்டார்.பிறகு அதை நான் பண்ணினேன். அதனால எனக்கு ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் டெவலப் ஆச்சு.நானும் அவரும் வாய்ப்பு தேடி அலைஞ்சப்போதான் நண்பர்கள் ஆனோம்.
போனில் டெல்லி கணேஷ்
ஒரு நாள் டெல்லி கணேஷ் சார் போன் செய்தார்... ஜீவா நீதான் என் குரல்ல நல்லா பேசுவியே... என் வாய்ஸை டப்பிங் கொடுத்துடேன்..நான் முக்கியமான வேலையா வெளியூர்ல இருக்கேன்னு சொன்னார். நானும் ஓகே சொல்லிட்டு அவங்ககிட்ட பேசினேன்.கொஞ்ச நேரம் கழிச்சு சார்கிட்ட இருந்து போன்.. ஏய்யா போறதுக்கு வாரதுக்கு எல்லாம் சேர்த்து சார்ஜ் கேட்டியாமேன்னு சார் சிரிச்சுகிட்டே கேட்டார்.