For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தை... சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்களே...!

Google Oneindia Tamil News

சென்னை: தனது மாமியாரை போலியாக சுய நலத்துக்கு ஒரு மருமகள் இப்படி பாராட்டி இருக்கார். அதாவது.. அத்தை இந்த கொண்டையில் சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்க என்று.

இதில் என்ன போலி, என்ன சுயநலம் என்று பிறகு பார்க்கலாம். ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியின் வரும் வார விவாத தலைப்பு போலியான நடிப்பினால் அடைந்த பலன் என்ன என்பதுதான்.

இதில் எல்லா உறவுகளும் அடக்கம். மாமியார், மருமகள் உறவு மட்டும் அல்ல அம்மா பிள்ளை, அப்பா மகள் பாசம் முதற்கொண்டு அடங்கி இருக்கிறது.

 எங்க துபாய்ங்க

எங்க துபாய்ங்க

சில பேர் வெளிநாடு.. அதுவும் இதோ இங்கே இருக்கற துபாய்க்கு வேலைக்கு போயிட்டு லீவில் ஊருக்கு வரும்போது பண்ற அலட்டல் இருக்குமே... வெற்றிக்கு கொடி கட்டு படத்தில் வடிவேலு பண்ற அலப்பறை மாதிரி இருக்கும். காது கொண்டு கேட்க முடியாது.

Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் குஷ்பூ மாறிட்டார்...!Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் குஷ்பூ மாறிட்டார்...!

அண்ணன் பேசுவது

அண்ணன் பேசுவது

ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒருவர் தனது அண்ணன் பத்தி சொல்றார். அண்ணன் துபாயில் வேலை பார்க்கிறார் சார்... கார்பெண்டர் வேலை. லீவுக்கு ஊருக்கு வரும்போது துபாயில் தான் ரொம்ப ஜாலியா வேலை பார்க்கறதா சொல்வார். நான் துபாய் போயி மூணு மாசம் அவரோட இருந்தேன்.

சார் கஷ்டம்

சார் கஷ்டம்

அண்ணனோட வேலை ஒரு ரோபோட் மாதிரிதான் சார். காலை 7 மணிக்கு கிளம்பி போனா ராத்திரி ஏழு மணிக்கு வருவார். கார்பெண்டர் வேலை ரொம்ப உயரத்தில் ஏறி எல்லாம் வேலை பார்க்கணும். ஆனால், வீட்டுக்கு வந்து தனது மகள்கிட்ட பேசும் போது தான் துபாயில் ரொம்ப சொகுசா வேலை பார்க்கறதா சொல்வார்.அதனால், அவங்க சந்தோஷமா இருப்பாங்கன்னு சொன்னார்.

என் நண்பன்

என் நண்பன்

அதே மாதிரி என் நண்பன் ஒருத்தன் சென்னையில் வேலை பார்க்கறான்.ரொம்ப ஒல்லியா இருப்பான். சாப்பிட்டு கூட இருக்க மாட்டான். அம்மாவுக்கு போன் பண்ணினா சொல்லுவான்.. அம்மா நான் இங்கே வயிறு நிறைய சாப்பிட்டுட்டு சந்தோஷமா வேலை பார்த்துகிட்டு இருக்கேன். நீங்க கவலைப்படாம சந்தோஷமா இருங்க. லீவு கிடைக்கும்போது ஊருக்கு வரேன்னு பொய் சொல்லுவான். போலியாத்தான் இருக்கேன்.. அம்மா சந்தோஷமா இருக்காங்க அது போதும்னு சொல்லுவானு சொன்னார்.

ரொம்ப அழகு

ரொம்ப அழகு

சார் எனக்கு சமைக்கறதுன்னா பிடிக்காது சார்... அதனால், வீட்டுக்குள்ளே நுழையும்போதே அத்தை நீங்க எனக்கு அத்தை இல்லை அம்மான்னு சொல்லிட்டேன். அதே மாதிரி அத்தை இந்த புடவையில் நீங்க கொள்ளை அழகுன்னு சொல்லுவேன். அதோட இந்த கொண்டை போட்டு இருப்பதில் சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரி அழகா இருக்கீங்கன்னு சொல்லுவேன். ஆனா, மனசுக்குள்ளே எப்படி இவங்க சாவாங்கன்னு இருக்கும்னு வடிவேலு மாதிரி மைண்ட் வாய்ஸ் ஓடிக்கிட்டுத்தான் இருக்கும்னு தைரியமா சொல்றார்.

பொறுத்திருந்து பார்க்கலாம்... இன்னும் யார் யார் மனசில் மாமியார் பத்தி என்ன ஓடுதுன்னு...!

English summary
Let's see what is fake and what is selfishness. The subject of the upcoming weekly debate on the Tamil Tamil program of Zee Tamil TV is the result of fake acting.This includes all relationships. Not only the mother-in-law and daughter-in-law, but also the affection of the mother-child and father-daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X