Ayudha Ezhuthu Serial: கல்வியற்ற கிராமங்களை கண்டுபிடிக்காம அதிகாரிக்கு என்ன வேலை?
சென்னை: நாகர்கோயில் பக்கத்துல ஒரு கிராமமாம். இந்த கிராமத்தில் காளி அம்மாள் ஒரு அம்மா.அவங்க ஊரில் அவங்க வைத்ததுதான் சட்டம்.உதவி மனப்பான்மை கொண்டவங்களாக இருந்தாலும், சட்டத் திட்டங்களில் வன்முறை.
வீட்டில் தன் பேரப் பிள்ளைகள் உட்பட யாருமே பள்ளிக்கு போகக் கூடாது.பள்ளியும் நடக்கக் கூடாது.பள்ளி ஆசிரியர்கள் வெட்டியாக உட்கார்ந்து சம்பளம் வாங்கிகிட்டு போக வேண்டும்.
இப்போதுதான் அந்த ஊருக்கு புதிதாக இந்தகிரான்னு வேறு ஒரு சப்கலெக்டர் வந்து இக்கங்களாம். அவங்க இந்த பள்ளியை எடுத்து நடத்த விரும்பறாங்க. ஆசிரியர் யாரும் காளி அம்மா பத்தி பேச மறுக்கறாங்க.
சரவணன் ஆசிரியர்
சரவணன் ஆசிரியர் காளி அம்மா தனக்கு செய்த நன்மைகளை மறந்து பொண்டாட்டி பேச்சு கேட்காமல் போலீசில்புகார் கொடுத்துட்டு பஸ்ஸில் வரும்போதே, சரவணன் கொடுத்த புகார் காளி அம்மாவின் .பஸ்ஸை பாதியில் நிறுத்தி சரவணனை கொலை செய்துட சொல்றாங்க காளி அம்மாள் . உன் குடும்பத்தை பார்த்துக்கறேன்னு சொல்லி அவனை அனுப்பி வைக்கறாங்க.
நாட்டில் இப்படியுமா
வளர்ந்த நமது நாட்டில் மலை மேலிருக்கும் பள்ளிக்கு கூடத்துக்கு கூட ஆசிரியர்கள் தினம் பாடம் சொல்லிக் குடுத்துட்டு வர்றாங்க. ,கோடைக்கானல் இப்படிப்பட்ட மலைப் பிரதேசங்களில் இருக்கும் ஏழை மக்கள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள்.இவர்களுக்கு பள்ளி நடக்கவில்லையா என்ன?
எந்த காலத்தில்
கதையை சொன்நாள் எந்த கதை எந்த காலத்தில் நடந்த கதை,சுதந்திரத்துக்கு பின்னா ,சுதந்திரத்துக்கு முன்னா என்று தயவு செய்து விளக்கம் அளித்து விடுங்கள்.ஒரே குழப்பமா இருக்குதுங்க.நாகர்கோயில்பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இன்னும் இப்படி நடக்கிறதா?
அதிகாரிகள் எதுக்கு
எதுக்குங்க அதிகாரிகள்...கல்வி,பெண் கல்வி என்பது மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட்ட இந்த காலக் கட்டத்தில் இப்படி ஒரு கதை சத்தியமா சமூகத்தை பின்னோக்கித்தான் அழைத்துச் செல்லும். அதோட, இந்த கதை பற்றிய நுணுக்கம் எல்லாம் ஆராய்கின்ற அளவுக்கு யாருக்கும் நேரமில்லை.