Ayudha ezhuthu serial: வெறும் காளி அம்மாதானே... காளி அம்மன் இல்லையே!
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் இப்போது கதை சுவைபட ஆரம்பித்து இருக்கிறது. காளி அம்மா கலெக்டரை நேருக்கு நேர் சந்தித்து தனது பலத்தை காண்பித்து இந்திராவை கலங்க வைத்துவிட்டார்.
பள்ளிக்கு படிக்க குழந்தைகளை அனுப்புங்கள் என்று வீடு வீடாக சென்று அழைத்தும் குறிப்பிட்ட நாளில் எந்த குழந்தையும் வரவில்லை. ஆசிரியர்களும் அலுத்துக் கொள்ள, இந்திரா பள்ளியைவிட்டு கிளம்புகிறாள்.
வழியில் இடை மறிக்கிறது ஒரு கார்.அது அந்த ஊர் காளி அம்மாவின் கார். இவளும் காரை விட்டு இறங்க அவங்களும் காரை விட்டு இறங்கறாங்க.
Themozhi BA Serial: தேன்மொழி ...எக்ஸாம் ஹாலில் தேன்மொழி!
சக்தியின் அம்மா
மனைவி செய்வது பிடிக்காமல் காளி அம்மாவின் புருஷன் தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்று கலெக்டரிடம் சொல்றார். ஆனால், காளி அம்மாவின் மகன்தான் சக்தி என்றும், அந்த அம்மாவின் புருஷன்தான் சக்தியின் அப்பா என்றும் தெரியாமல் இந்திரா அவர்களுடன் பழகி வருகிறாள்.
அப்பா உதவி
அப்பா கலெக்டருக்கு பிள்ளைகள் அனுப்பி உதவி செய்வதை அம்மா காளி அம்மாவிடம் சொல்லி விடுகிறான் சக்தி. காளி அம்மா தன் புருஷன் ஏற்பாடு செய்து இருந்த குழந்தைகளை பள்ளிக்கு போக விடாமல் செய்துடறாங்க. இத்தனை நாள் நான் உன்னை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தேன்.
பிள்ளைகளை சேர்க்க
பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகளை சேர்க்க ஆள் சேர்த்தே பாரு.. அப்போதுதான் நான் இனிமே விட்டு வைக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். என்ன இருந்தாலும் பிள்ளைகளை சேர்க்க வீடு வீடா போயி கஷ்டப்பட்டே இல்லை.இந்த பூ மாலை போடறேன்னு கிட்டே கூப்பிட, . திரும்பி வந்து காரை திறக்கிறாள். இந்திராவால் காரை திறக்க முடியலை...
கார் கதவுகூட
காளி அம்மாவை கேட்காமல் கார் கதவு கூட திறக்காது. நான் பேசிக்கிட்டே இருக்கேன் மரியாதையே இல்லாமல் கிளம்பறே... என்ன செய்யலாம்..உன் பிஏ ஆடியபாதத்தை விட்டு, உன் கன்னத்துல ஒரு அடி வைக்க சொல்லவான்னு கேட்கறாங்க..சும்மா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். இனிமே என் வழியில் குறுக்கிடாதே... வந்தோமா,கை எழுத்து போட்டோமான்னு போயிகிட்டே இருக்கணும்னு சொல்றாங்க.