Ayudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்!
சென்னை: என்னங்க சப்கலெக்டரு இந்திரா நீங்க? காளி அம்மா பூட்டி வச்சிருந்த பள்ளியை தைரியமா திறந்து நடத்துனீங்க. இதனால் ஒரு வாத்தியார் உயிர் பலியாச்சு. அட நம்ம விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் கதைங்க இது!
மண் கொள்ளையர்களை பிடிச்சு வச்சீங்க. இன்னும் என்னென்னவோ நல்லதை எல்லாம் ஊருக்கு செய்த உங்களுக்கு கூடவே இருக்கற ஒரு பையன் யாருன்னு தெரியாதா?
குக்கிராமம்.. இந்த கிராமத்தில் காளி அம்மா ராஜ்ஜியம்தான் நடக்குது. இதுல கூடவே இருக்கற ஒருத்தனை யாருன்னு தெரியாம இருக்கீங்களே கலெக்டர் அம்மா.
படம் வாலி
படிச்ச கலெக்டரம்மா...உங்களுக்கு படிச்சவிங்களுக்கும் படிக்காதவிங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாது. சக்தி படிக்காதவன்.. அவன் லண்டன் ரிட்டர்னுன்னு சொல்றான் நம்பிட்டீங்களேம்மா... அது மட்டுமா அடுக்கடுக்கா பொய் சொல்றான்.. என்னை யாரும் ஏமாத்த முடியாது தெரியுமான்னு வாலி படத்துல சிம்ரன் அஜீத் கிட்டே சொன்ன மாதிரி சொல்றீங்களே...
Naam Iruvar Namakku Iruvar Serial: கார்த்திக் ஆனந்தி கல்யாணத்துல என்னமோ இடிக்குதே...!
வயசான ஆடியபாதம்
வயசான ஆடியபாதத்தை உதவியாளரா வச்சுகிட்டு அடிக்கடி ஆடியபாதம் ஆடியபாதம்னு கூப்பிட்டு விவரம் கேட்கறீங்களே.. சக்தியை பத்தி கொஞ்சம் விசாரிங்க ஆடியபாதம்னு சொல்லக் கூடாதா? படிச்ச பொண்ணு... அதுவும் கலெக்டருக்கு படிச்சு இருக்கீங்க இப்படியா பொது அறிவு இல்லாம இருப்பீங்க?
காதலா இது?
படிச்சவன், படிக்காதவன் யார் மேல வேணும்னாலும் காதல் வரலாம்.. தப்பில்லை. ஆனால், சக்திதான் தனக்கு எதிரியான ஊரைக் கெடுக்கும் காளி அம்மாவின் மகன்னு தெரியாமலே அந்த குக்கிராமத்தில் வசிக்கறது எப்படிங்க? கலெக்டரம்மா உங்க அறியாமையை எல்லாருக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்க.
கல்யாணம் ஆஹா!
சக்தி காளி அம்மாவின் மகன்னு தெரியாமலே கலெக்டரம்மாவுக்கு அவன் மேல காதலும் வந்துருச்சு. அப்பாவும், மகனும் சேர்ந்து கலெக்டரம்மாவை ஏமாத்தி இப்போது காளி அம்மாவுக்கு தெரியாமலே கல்யாண நிச்சயதார்த்தத்தை நடத்திப் புட்டாங்க. இட இன்னும் ஒண்ணு சொல்லணுமே..ஊருல எந்த மூலையில என்ன நடந்தாலும் தெரியற காளி அம்மாவுக்கு தனது செல்லமகன் சக்திக்கும், கலெக்டருக்கும் ரகசியமா நடக்கற நிச்சயதார்த்தம் தெரியலைங்க.. என்ன ரவுடியோ என்னமோ!