Ayudha Ezhuthu Serial: இந்த சீரியலில்தான் சரண்யா தாய்வீடுன்னு நடிக்க வந்துட்டாங்க!
சென்னை: ரன் சீரியலில் இருந்து விலகிய நடிகை சரண்யா விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் நடிக்க வந்துள்ளார்.
சன் டிவியின் ரன் சீரியலில் திவ்யாவாக நடித்துக் கொண்டு இருந்தார் சரண்யா. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் நடிகையானவர்.
விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலுக்கு அழைப்பு வந்ததால், தான் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து ஆயுத எழுத்து சீரியலில் இனி இந்திராவாக நடிக்க உள்ளதாக கூறி இருக்கார்.
செய்தி வாசிப்பாளர்
புதிய தலைமுறை டிவியின் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரண்யா. இவரை விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிகையாக அறிமுகப் படுத்தியாது. அதன் மூலம் மக்கள் மத்தில் பேரும் புகழும் அடைந்தவர் சரண்யா. கடந்த இரண்டு மாதங்களாக சன் டிவியின் ரன் சீரியலில் திவ்யாவாக நடித்து வந்தார்.
அழைப்பு மீண்டும்
விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் இந்திரவாக நடித்து கொண்டு இருந்த நடிகை வேறு ஒருவர். ஆனால், என்னவாச்சோ, இந்திராவையும்., அவர் காதலித்த சக்தியையும் ஆள் மாற்றம் செய்ய ஆயுத எழுத்து சீரியல் குழு திட்டமிட்டு இருந்தது போலும். எனவே, இந்திராவாக நடிக்க சரண்யாவுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.
ஓகே சொன்னார்
உடனே ஓகே சொன்ன சரண்யா விஜய் டிவியின் ட்வீட்டர் பக்கத்தில் தான் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து உள்ளதாகவும், ஆயுத எழுத்து சீரியலில் இனி சப்கலெக்டர் இந்திராவாக தான்தான் நடிக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.இப்போது அவர் நடித்த எபிசோட்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
கை கழுவினார்
விஜய் டிவியான தாய் வீட்டு சீரியலுக்காக சன் டிவியின் ரன் சீரியலை கை கழுவினார் சரண்யா. இனி சப்கலெக்டர் இந்திராவாக சரண்யா நடிக்க உள்ளார். இந்த மாற்றம் கூட மிக நன்றாகத்தான் இருக்கிறது.பார்த்து மகிழுங்கள்.