For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Ayudha Ezhuthu Serial: அநியாயமா இருக்கே... ஊருக்குள்ளே பள்ளிகூடம் கூடாதா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திரா, தான் வேலைப் பார்க்கும் ஊரில் பள்ளிக்கூடம் நடக்க மாட்டேங்குதே, ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கறாங்களேன்னு கவலையில் இருக்கிறாள்.

பள்ளிக் கூடத்துக்கு பிள்ளைகள் வராமல் போனதற்கு அந்த ஊரின் ரவுடி அம்மா காளி அம்மாதான் காரணம் என்று இந்திராவுக்கு தெரிந்து போகிறது.

எப்படியாவது பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறாள் சப் கலெக்டர் இந்திரா.முதலில் வீடு வீடாக சென்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கோரிக்கை வைக்க புறப்படுகிறாள்.

Azhagu Serial: பொண்டாட்டி பூர்ணா வேஷம் கலைஞ்சாலும் புருஷன் மகேஷ் நம்பலையே! Azhagu Serial: பொண்டாட்டி பூர்ணா வேஷம் கலைஞ்சாலும் புருஷன் மகேஷ் நம்பலையே!

ஒரே முடிவில்

ஒரே முடிவில்

அந்த ஊரில் யாருமே தங்கள் பிள்ளைகளை காளி அம்மா சொல்லாமல் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்கிறார்கள்.அவங்க என் பிள்ளைக்கு உசிர் குடுத்த தெய்வம்..அதனால முடியாதுங்கன்னு சொல்லிடறாங்க. காடு மேடு என்று சுற்றி திரிந்த இந்திரா கால் வலியுடன் வீட்டுக்கு திரும்புகிறாள்.

கூட்டம் போட்டு

கூட்டம் போட்டு

கோயில் முன்னால் மக்களை கூட்டி, சப்கலெக்டர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை வச்சுக்கிட்டு இருக்கா. திடீர்னு காளி அம்மா கார் வந்து நிற்க, மக்கள் நொடியில் காணாமல் போயிடறாங்க. ஏம்ப்பா எல்லாருமே ஓடிப் போயிட்டாங்க.ஒரு சப்கலெக்டர் பேசிகிட்டு இருக்கும்போது இப்படி போகலாமா? கூப்பிடு அவங்களைன்னு காளி அம்மா சொல்றாங்க.

புருஷன் சக்தி

புருஷன் சக்தி

காளி அம்மா புருஷன்,அதாவது சக்தியின் அப்பா சக்தியை கூப்பிட்டு, என்னடா நீ...உன்னை காதலிக்கற சப்கலெக்டர் பள்ளி கூடத்துக்கு பசங்க வரணும்னு போராடிக்கிட்டு இருக்காங்க. பேசாம இருந்தா எப்படின்னு கேட்கறார். நான்தான் அப்பா அவங்களை காதலிக்கிறேன்.. அவங்களா என்னை காதலிக்கறாங்கன்னு கேட்கறான்.

பதில் சொல்லு

பதில் சொல்லு

சரி அதை விடுடா.. இப்போ சப்கலெக்டருக்கு நீ என்ன உதவி செய்யப்போறேன்னு கேட்கறார். அப்பா இந்த விஷயத்துல நான் அம்மா கட்சிதான்.என்னதான் இந்திராவை நான் காதலிச்சாலும், அம்மா மேலதான் எனக்கு விசுவாசம் அதிகம். அம்மா இந்த ஊரையே கட்டமைச்சவங்கப்பா..அவங்களுக்கு எதிரா என்னால நடக்க முடியாதுன்னு சொல்றான்.

இப்போ அந்த ஊரில் பள்ளிக் கூடம் நடக்குமா? நடக்காதா?

English summary
Subcollector Indira in Vijay TV's ayutha ezhuthu serial is worried that teachers will not be sitting in the city where she works. Indira learns that the town's rowdy mother Kali Ammadan is responsible for the lack of children in the school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X