அழகம்மை மருமக புருஷனை வாட்ச் மேனை விட்டு துரத்தி அடிக்கறாளே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் சுறுசுறுப்பா போயிகிட்டு இருக்கு. நல்ல திருப்பம்..சுவையான கதையோட்டம், பளிச் வசனம்னு கலக்குது.
ரேவதிக்காக பார்க்க ஆரம்பித்த சீரியல் விரும்பிகள், இப்போ ரொம்ப இஷ்டமா சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சு இருக்காங்க.
அழகம்மை வீட்டில் எல்லாரும் ஏரை முன்னோக்கி செலுத்தினா, பூர்ணா மட்டும் பின்னோக்கி செலுத்துவா. அப்படித்தான் இருந்துச்சு குடும்பம்.
குண்டு மேல குண்டு தூக்கி போடறானே பாரதி.. தாங்குவாங்களா சவுந்தர்யாம்மா!
அப்புறம் பூர்ணா குப்பைத் தொட்டியில கண்டு எடுக்கப்பட்ட குழந்தைன்னு தெரிஞ்சதும், பூர்ணாவுக்கு அழகம்மை வீட்டோட கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாம போகுது.
இந்த சமயத்துலதான், பூர்ணாவுக்கு தெரியாம மயக்க மருந்தை புருஷன் மகேஷ் குடுத்து, அவளை கர்ப்பமாக்கிடறான்.இவங்க வீட்டு வாரிசை என் வயித்துல சுமக்கறதான்னு கோவம் வந்துருது பூர்ணாவுக்கு.
இந்த சமயம் பார்த்து சகுந்தலா தேவியோட காணாம போன ரெண்டு பொண்ணுங்களில் சின்னபொண்ணுதான் பூர்ணான்னு தெரிய வருது. தன் அம்மா சகுந்தலா தேவியோடு வீட்டுக்கு வந்து உடமைகளை எடுத்துகிட்டு வீட்டை விட்டு போயிடறா பூர்ணா.
பூர்ணாவைத் தேடி மகேஷ் அவ வீட்டுக்கு போறான்.. அவனை வெளியே போன்னு திட்டறா பூர்ணா. அவன் நீ வராம போக மாட்டேன்னு சொலல், வாட்ச்மேனை கூப்பிட்டு, இழுத்து வெளியே தள்ளிவிட சொல்றா. அதே போலவே அவனும் செய்யறான்.
கேட்டுக்கு வெளியே அழகம்மை மகன் விழுந்து கிடக்கான். சகுந்தலா தேவி பொண்ணு பூர்ணா வேடிக்கை பார்த்துட்டு நிக்கறா. பணம்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்குது.