டூ மச் அழகம்மை... பொண்ணை பெத்து இப்படியா வளர்ப்பாங்க?
சென்னை சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையின் இளைய மகள் காவ்யா நீட் தேர்வு எழுதாம காதலனை பார்த்துட்டு வர்றா.
அதுவும் வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் நிச்சயமாகிட்ட காதலனை பார்க்க போயிட்டு வர்றா.
இது ஒரு பெண்ணின் உணர்வு பூர்வமான விஷயமாம்.. பார்த்து பக்குவமாதான் பேசணுமாம் அழகம்மை தன் பெண்ணுக்காக பேசறாங்க.
சந்திரகுமாரி நேரத்துல தமிழ் செல்வியா? அப்போ சந்திரகுமாரி கதி...?
வீட்டாரின் கனவு
காவ்யா நல்லா படிக்கற பொண்ணு...அவளை நீட் எழுத வச்சு டாக்டராக்கிடணும்னு குடும்பமே கனவு காணுது. காவ்யாவும் நீட் தேர்வுக்கு தயாராகறா. இதுக்கு நடுவுல மதனை காதலிச்சு,திருமணம் வரைக்கும் போயி,இப்போ மதனுக்கு வேற ஒரு பெண்ணோட திருமணம் நடக்க போகுது.
விபத்து மதனுக்கு
மதனுக்கு பைக்ல போகும்போது ஆக்சிடென்ட் ஆகி சீரியஸா இருக்கான்னு நீட் தேர்வுக்கு போன காவ்யாவுக்கு மதனின் நண்பர்கள் போன் செய்து சொல்றாங்க. நல்லவேளை இப்போ சொன்னே.. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லி இருந்தா நான் நீட் ஹாலுக்கு போயிருப்பேன்னு சொல்லிட்டு, ஆட்டோ புடிச்சு அழுதுகிட்டே வர்றா.
மதனின் அம்மா
மதனின் அம்மா காவ்யாவை அவமானப் படுத்தியும் இரவு வரை காத்திருந்து மதனை பார்த்துவிட்டு, மெதுவா நடந்து வீட்டுக்கு வர்றா. வீட்டுல காவ்யாவை காணோம்னு எல்லாரும் தேடறாங்க.கடைசியா காவ்யாவை சுதா வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றா.
திட்டறான் அண்ணன்.
காவ்யா கதையை சுதா அழகம்மையிடம் சொல்ல நீங்க சொல்ற கதை ரொம்ப டச்சிங்கா இருக்கு அண்ணி...ஆனா,சகிக்கலை... நீட் எக்ஸாம் எழுதாம போன காவ்யாவை கன்னத்துல ரெண்டு போடறதை விட்டுன்னு கத்தறான்.
புரியாது உனக்கு
உனக்கு புரியாதுடா.. நீ சும்மா இரு... இது உணர்வு பூர்வமான விஷயம். மனசு சம்பந்தப்பட்ட விஷயம்.. பொறுமையாத்தான் கையாளணும்...நான் பார்த்துக்கறேன்னு அழகம்மை சொல்றாங்க. பொண்ணுகிட்ட போயி நீ மதன் மேல வச்சு இருக்கற அன்பு உண்மைன்னா அவன் உனக்குத்தான்னு சொல்லிட்டு மகளை தன் மடியில படுக்க வச்சுக்கறாங்க.
பெண்ணை பெத்து இப்படி வளர்த்தா எப்படி அழகம்மை...?