அடப் பாவமே.. அழகம்மை ரெண்டாவது மருமக வீட்டை விட்டு போயிட்டாளாமே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் நடிகை ரேவதிதான் அழகம்மை. குடும்பத்தை நிர்வகிக்கிறது. குடும்ப சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கறதுன்னு அழகம்மை குடும்பம் நடத்தும் விதம் அற்புதம்.
மூத்த மருமக சுதாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி, அவன் மூலமா ஒரு குழந்தையும் இருக்க, அவ புருஷன் செத்துடறான். ஒரு சூழ்நிலையில அழகம்மையின் மூத்த மகன் ரவி சுதாவை கல்யாணம் செய்துக்கறான்.
ரவி அத்தானை கல்யாணம் செய்துக்க அசையா இருந்த பூர்ணாவை, ரவியின் தம்பி மகேஷுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க. அப்போ ஏற்பட்ட ஏமாற்றத்துல பூர்ணாவின் கேரக்டர் மாறி போயிருது.
ஒரு கட்டத்துல தான் குப்பைத் தொட்டியில கிடந்த அனாதை பொண்ணுன்னு பூர்ணாவுக்கு தெரிஞ்சு போயிருது. அன்னிலேர்ந்து இந்த குடும்பத்தோட பூர்ணாவால ஒட்ட முடியலை. வீட்டை விட்டு போகணும்னே நினைக்கறா.
ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் 'அது" நடக்கலியாமே... பாவம் அந்த பொண்ணு!
வீட்டை விட்டு போக முடியாதபடி அழகம்மை கோர்ட்டுல ஸ்டே ஆர்டர் வாங்கிடறாங்க. இந்த நேரத்துலதான் குடும்பத்துக்கு வாரிசு மகேஷும், பூர்ணாவும் பெத்து கொடுக்கணும்னு அழகம்மை ஆசைப்படறாங்க.
அதே மாதிரி பூர்ணாவும் உண்டாகறா.. இருந்தாலும் பூர்ணாவுக்கு சந்தேகம் வருது. குழந்தை உண்டாகாம இருக்க ஜாக்கிரதையாத்தானே இருந்தோம் எப்படின்னு குழம்பறா. மகேஷ்கிட்ட கேட்க, மகேஷ் உனக்கு மயக்க மருந்து கலந்து குடுத்துட்டு, உன்னை நெருங்கினேன்னு சொல்ல பூர்ணா கோவம் உச்சமடையுது.
இந்த குழந்தை என் வயித்துல இருக்கறது எனக்கு பிடிக்கலைன்னு சொல்லி வீட்டுல ஒரே சண்டை. யார் பேச்சையும் கேட்காம இனி இந்த வீட்டுல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு கிளம்பிடறா பூர்ணா.
அழகம்மை அழறா.. என்ன பிரயோஜனம் புரிஞ்சுக்கற நிலமையில பூர்ணா இல்லையே...!