Azhagu Serial: சினிமா மாதிரி விறுவிறுப்பான 'அழகு" காட்சிகள்!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் காட்சிகள் நேற்று சினிமா மாதிரி விறு விறு என்று இருந்தது கொஞ்சம் வியப்பான விஷயம்தான்.
அர்ச்சனா திருநாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில், இறந்துவிட்டாள் என்று நினைத்த திருநாவின் முன்னாள் காதலி நிவி திருநாவை தேடி வந்துவிட
அவளை பூர்ணாவிடம் இருந்து மறைத்து வைக்கும் முயற்சிகளில் சுதாவும் ரவியும் இருக்க என்று பரபர என்று காட்சிகள் இருந்தது.
சங்கீத் ஃபங்க்ஷன்
இப்போது திருமணங்களில் சங்கீத் ஃபங்க்ஷன் என்று மருதாணி வைக்கும் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். அந்த விழாவை சீரியலுக்கு என்றாலும் பிரமாண்டமாக அழகுவில் கொண்டாடிக் கொண்டு இருக்க நிவி திருநாவைத் தேடி வர, இவளைக் கண்டதாக ரவி சுதாவிடம் கூறுகிறான்.
Barathi Kannamma Serial: படிக்காதவர்னாலும் இப்படித்தான் இருக்கோணும்!
நிவி இருக்காது
அது நிவியா இருக்காது ரவி.. நிவி மாதிரி இருக்கும் யாராவது இருக்கும் என்று சமாதானம் சொல்கிறாள் சுதா. ஆனால், அவளும் அர்ச்சனா ரூமில் நிவியைப் பார்த்துவிட, எல்லாரையும் அனுப்பிவிட்டு நிவியிடம் பேசும்போது, நிவி நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு அழுகிறாள்.
ரவியை அனுப்பி
அதே ரூமில் இருக்க சொல்லிவிட்டு கணவன் ரவியை அனுப்பி ரவி நீங்கள் சொன்னது உண்மைதான். 8ம் நம்பர் ரூமில் நிவி இருக்கா அழுதுகிட்டே இருக்கா . நீங்க போய் சமாதானப் படுத்துங்க. யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்றா. ரவி மறைந்து மறைந்து அந்த ரூமுக்கு போறான்.
பூர்ணா பார்க்கிறாள்
ரவி போனதும் ரூமைத் திறக்கும் நிவி ரவியைப் பார்த்து அழுகிறாள். பூர்ணா ரவி போவதை பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதை சுதா கவனிச்சுக்கிட்டே இருக்க. உடனே சுதா போன் செய்து ரவி உடனே அந்த ரூமை விட்டு வேறே ரூமுக்கு போங்க. பூர்ணா அந்த ரூமை வாட்ச் பண்ணிகிட்டே இருக்கான்னு போன் செய்றா சுதா.
ரேவதி பார்த்துடறாங்க
நிவி துப்பட்டாவால் முகத்தை மறைச்சுக்க. நாம வேற ரூமுக்கு போவோம்னு சொல்லி நிவியை வேற ரூமுக்கு அழைச்சுட்டு போறான் ரவி. அவளை அவன் வேற ரூமுக்கு அழைச்சுட்டு போறதை ரேவதி பார்த்துடறாங்க. சங்கீத் ஃபங்க்ஷன் நடந்துகிட்டு இருக்கும்போதே இதுவும் நடந்துகிட்டு இருக்கறது சினிமா மாதிரி நல்லாருக்கு.