Azhagu Serial: வாவ்... ரேவதி வர்றாங்களாம்.. கண்குளிர பாருங்க!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் கடந்த இரண்டு மாதங்களாக சீரியலில் தலைகாட்டாமல் இருந்த ரேவதி இன்று இரவு வர்றாங்க.
நடிகை ரேவதி அழகு சீரியலின் ஸ்டார் காஸ்ட் நடிகை என்று சொல்லலாம். அவங்களுக்கு நிறைய தனித் திறமைகள் இருக்கு.
குறும்படம் இயக்குதல், சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிப்பது என்று வேலைகளும் இருக்கு.
முக்கிய நேரங்களில்
ரேவதி பிசியாக இருக்கட்டும்.. அது எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஆனால், தொலைக்காட்சி சீரியல் எனும்போது அதற்கு முக்கியத்துவம் தராமல் மற்ற பணிகளை கவனிக்கும் ரேவதிக்கு நாம் மட்டும் ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்.? ரேவதி அழகம்மையாக இருந்தே ஆக வேண்டிய நேரத்தில் கூட சீரியலில் இருப்பதில்லை.
ஏனோதானோ என்று
என்னதான் சீரியல் என்றாலும் ஏனோ தானோ என்று ஷூட் செய்துவிட முடியுமா? அததுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்ய வேண்டாமா?அப்படித்தான் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேவதி அழகு சீரியலில் கடந்த இரண்டு மாதங்களாக இல்லாமல் இருந்தார்.
நொண்டி சாக்கு
சம்பந்தி எங்கேன்னு யாரவது கேட்டால் அப்புவைத் தூக்கிகிட்டு கோயிலுக்கு போயிருக்கா அழகுன்னு சொல்லுவாங்க. அப்புறம் வசந்தா வீட்டுக்கு ஒய்வு எடுக்க போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. இப்படி ஒரு நடிகை சீரியலுக்கு தேவை இல்லையே..எத்தனை பேர் வாய்ப்பில்லாம இருக்காங்க.. அவங்களுக்கு அதை தரலாமே?
ரசிகர்களுக்கு மட்டும்
நடிகை ரேவதிக்குன்னு தனி ரசிகர் ரசிகைகள் இருக்காங்க. அவங்க சந்தோஷப படற மாதிரி சன் டிவியில் இன்னிக்கு ப்ரோமோ போகுது. அதாவது இளைய மகன் திருநா கல்யாண விஷயமா பேச இன்னிக்கு ரேவதி சீரியலில் தலை காட்டறாங்க. பார்த்து மகிழுங்கள்...