கட்டிப் பிடின்னா உடனே புடிச்சுக்குவியா? அம்மா சொன்னாங்க...!
சென்னை: மாண்புமிகு மாணவன் படம் இப்போ அழகு சீரியலில் சுதாவா நடிக்கறாங்களே ஸ்ருதி ராஜ் அவங்களுக்கு முதல் படம்.
ரொம்ப நாளா மலையாளம் பக்கம் ஒதுங்கி இருந்த அவங்களை, தென்றல் சீரியல் மூலமா மீண்டும் தமிழுக்கு அழைச்சுக்கிட்டு வந்தார் நம்ம குமரன் சார்.
தென்றலுக்குப் பிறகு அழகு சீரியல் இவங்களை வேற லெவலுக்கு கொண்டு போய் சேர்த்துருக்கு. மிக சந்தோஷத்தில் இருக்கார் ஸ்ருதி ராஜ்.
வா.. சரி போ.. கூந்தல் மணம் கிறங்கடிக்குது.. கண் திறந்து ரசி.. அடடா அடடா ரொமான்ஸ்!
ஒன்னும் தெரியலை
ரொம்ப சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன்... விஜய் சார் கூட மாண்புமிகு மாணவன்தான் எனக்கு முதல் படம். அதுல காதலர்களான எங்களை விஜய் சார் சேர்த்து வைப்பார். ஷூட்டிங்க்கு அம்மா என் கூட வருவாங்க. ஒரு சீன்ல கட்டிப்புடிம்மானு டைரக்டர் சொல்லுவார், உடனே ஓடி கட்டிப் புடிச்சுக்கிட்டேன். சின்ன வயசு ஒன்னும் தெரியலை.
விஜய் டிவியில கடைக்குட்டி சிங்கமாம்... ஆனால இதுல கார்த்திக்கு சம்பந்தமில்லை!
சொல்லிகே கொடுத்தார்.
உடனே கட்டிப்புடிச்சுகுவியாம்மா.. மெதுவா வெட்கப்பட்டுக்கிட்டே கட்டிப் பிடின்னு சொல்லிக் குடுத்தார். அப்புறம்தான் நல்லா நடிச்சேன்னு பாராட்டினார். எங்கம்மாவும் கூச்சப்படாம கட்டிப் பிடின்னா உடனே கட்டிப் புடிச்சுக்குவியான்னு ஒரு ஜோக் மாதிரி நினைச்சு சிரிச்சு, உனக்கு ஒன்னும் தெரியலைடான்னு கொஞ்சினாங்க.
இப்போ அழகு
தென்றல் சீரியலுக்குப் பிறகு நல்லதா எதுவும் அமையல. படத்துல நடிக்க விருப்பமும் இல்லை. என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்...வேற புராஜக்ட் பண்ணிகிட்டு இருந்தேன். எனக்கு உள் மனசு நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லிகிட்டே இருந்துச்சு. அதே போல அழகு வாய்ப்பு கிடைச்சுது.
நடிக்கவே மாட்டாங்க.
ரேவதி மேம் கூட நடிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அவங்க நடிக்கறாங்கன்னே தெரியாது, இயல்பா பேசுவாங்க. அதுதான் அவங்க நடிப்பு. அவங்க நடிப்பைப் பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்.
20 வயசு
விஜய் சாரோட முதல் படத்துல நடிச்ச பொண்ணு இவங்க. இன்னும் இருப்பது வயதைத் தாண்டாத இளம் கதாநாயகி மாதிரி சின்ன பொண்ணா இருக்காங்க... ரகசியம் என்னவா இருக்கும்?