Barathi Kannamma Serial: வாவ்.. பாரதி கண்ணம்மாவில் செம்பா...!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் புகழ் பெற்றவர் ஆல்யா மானஸா. இவர் தன்னுடன் ஜோடியாக நடித்த குளிர் 100 பட நாயகன் சஞ்சீவுடன் காதல் வயப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ராஜா ராணி சீரியல் முடிந்து போனது. உடனடியாக இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள். ஆல்யா கணவர் சஞ்சீவ் மதமான இஸ்லாத்தையும் தழுவினார்.
அவர் இனி நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கார்.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் கருப்பு நிறத்தில் பிறந்த பெண்கள் சாதாரணமாக சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளை பூதகரமாக்கி சீரியல் எடுத்து வருகிறார்கள். இன்று இப்படிப்பட்ட பெண்கள் இந்த சீரியலில் வரும் பிரச்சனைகள் போன்று சந்திப்பது என்பது அரிது. இதை பூதாகாரமாக்கி இந்த சீரியலை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.
இன்டெர்நேஷ்னல் மாடல்
இப்போதெல்லாம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூட கருப்பு நிற பெண்கள் இன்டர்நேஷனல் மாடலாகி கலக்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கண்ணம்மா சந்திக்கும் பிரச்னைகளைக் கேட்டால் நம்ப முடியவில்லை. கருப்பே பிடிக்காத மாமியார் என்று சொல்வதையும் ஏற்பதற்கு இல்லை.
வெண்பா பாரதி
பாரதியும் வெண்பாவும் மெடிக்கல் கல்லூரியில் ஓன்றாகப் படித்தவர்கள். இவள் பாரதியை காதலிக்க இவளின் தோழி ஆல்யாவை அதாவது ஸ்வேதாவை பாரதி காதலிக்கிறான்.தன் காதலை ஸ்வேதாவிடம் சொல்லி ,பாரதியிடம் சொல்ல சொல்ல.பாரதியோ ஸ்வேதவைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லி விடுகிறான்.
வெண்பா ஸ்வேதாவை
இதனால் ஆத்திரம் அடைந்த வெண்பா ஸ்வேதவை லாரியை விட்டு ஏத்தி கொலை செய்ய சொல்லி, ஸ்வேதாவாக நடித்த ஆல்யா மானஸா விபத்தில் இறந்து விடுகிறார்.இப்படி இரண்டு மூன்று எபிசோடுகளுக்கு மட்டுமே நடிகை ஆல்யா மானஸா வந்து போகிறார். ஸோ.. இதன் மூலம் இனி இவர் சின்னத் திரையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பாரதி கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்து கொண்டு இருப்பது தெரிந்தும் அவனை அடைய வெண்பா பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறாள்.