Barathi Kannamma Serial: ஒரு பிரச்சனைன்னா செகண்ட் ஒப்பீனியன் கேட்க மாட்டீங்க?
சென்னை: சாதாரண மனிதர்கள் கூட இப்போது எல்லாம் உடலில் பெரும் பிரச்சனை என்றால், இருங்க இன்னொரு டாக்டர்கிட்டே செகண்ட் ஒப்பீனியன் கேட்போம்னு சொல்றாங்க.
இந்த ஹாஸ்பிடல் வேணாம்... வேற ஹாஸ்பிடல் போலாம்னு முடிவு எடுக்கறாங்க. அந்த அளவுக்கு மக்கள் கிட்ட விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்குது.
ஆனால், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில், கூட படிச்ச டாக்டர் பொண்ணு சொன்ன ஒரு பொய்யை நம்பி ,அதையே உண்மைன்னு வ்ருஷ கணக்கா அதை நம்பியே இருக்கான் பாரதி.
குழந்தை இருக்காது
பாரதியை லவ் பண்ணும் கூட படிச்ச வெண்பாவுக்கு பாரதி மேல காதல்.பாரதிக்கு உடன் படிக்கும் வேற பொண்ணு மேல் காதல். இந்த காதலை ஒழிக்க, அந்த பெண்ணை மட்டும் சாகடிக்க லாரி விபத்து ஏற்பாடு செய்கிறாள் வெண்பா. அதில் பெண் இறந்துவிட, பாரதியும் மாட்டிக்கறான்.
Naaam iruvar namakku iruvar serial: உனக்காக பிறந்தேனே எனதழகா... ஆஹா.. காதல் மயக்கம்!
பாரதிக்கு குழந்தை
பாரதிக்கு எல்லா டெஸ்டும் நன்றாக இருந்தும், குழந்தை பிறக்காது உனக்குன்னு டாக்டர் தோழி வெண்பா சொல்கிறாள். அதையே நம்பிக்கொண்டு தனக்கு குழந்தை பிறக்காதுன்னு நம்பி, கல்யாணம் செய்துக்கறப்போ, கண்ணம்மாவிடமும் உணைமை சொல்லிடுங்கன்னு அவள் அப்பாவிடம் கூறுகிறான்.
கண்ணம்மாவா அஞ்சலியா
வீட்டில் முதலில் குழந்தை பெத்துக்கப் போறது கண்ணம்மாவா,அஞ்சலியான்னு போட்டி நடக்குது. கண்ணம்மாவிடம் அப்பா பாரதி சொன்ன விஷயத்தை மறைச்சுடறார். ஆனால், கண்ணம்மா நான் உங்களுக்கு அழகான குழந்தை பெத்து தரேன் பாரதி மாமான்னு சொல்ல, பாரதி தவித்துப் போகிறான்.
நாள் பட
எந்த குறையும் நாள்பட சரியாக வாய்ப்பு உள்ளது. இவனுக்கு எந்த குறையும் இல்லை. இந்த நிலையில் இரண்டாவது ஒப்பீனியன் கேட்டு பார்ப்போம்னு டாக்டரா இருக்கும் பாரதிக்கே புத்தி வராதது போல விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் காண்பித்து இருக்கிறார்கள். இது குழந்தைத் தனமாக இருக்கிறது. இதை எல்லாம் கொஞ்சம் தவிர்க்கலாமே...