Barathi kannamma serial: ஒத்தையிலே கண்ணம்மா... விட்டுட்டியே பாரதி?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மாவின் அழகு தங்கை அஞ்சலிக்கும், பாரதியின் தம்பி அகிலனுக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது.
பாரதிதான் கருப்பு கண்ணம்மாவை தனது அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டவன். அதுவும் கருப்பு என்றாலே ஆகாத அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டான்.கருப்பு நிறம் என்றால், பணக்கார தொழிலதிபர் சவுந்தர்யா அம்மாவுக்கு பிடிக்காது.
மொத்தத்தில் அழகு மட்டும்தான் பிடிக்கும், கருப்பு என்றால் இருள் சூழ்ந்து போச்சுன்னு அவங்களுக்கு அர்த்தம். தனது மகள் வயிற்று பேத்தியை கூட அவள் கருப்பு என்று இதுவரை தொட்டதில்லை.
கண்ணம்மா அஞ்சலி
அண்ணன் பாரதி கருப்பு கண்ணம்மாவையும், கண்ணம்மாவின் தங்கையான அஞ்சலியை பாரதியின் தம்பி அகிலனும் கல்யாணம் செய்துக்க போறாங்க. இதில் பாரதி கண்ணம்மா கல்யாணம் முடிஞ்சு போச்சு.இப்போ அகிலன் அஞ்சலி கல்யாணம் நடக்க போகுது. அஞ்சலி கண்ணம்மாவின் அப்பாவுக்கு இரண்டாம் தாரத்துக்கு பிறந்த பெண்.மிஸ் சென்னை வேற.
அம்மா சவுந்தர்யா
சவுந்தர்யா அம்மா இப்போது நடக்க இருக்கும் அகிலன், அஞ்சலி கல்யாணத்தை ஊரும், உறவும் மெச்ச நடத்தணும்னு கனவு கண்டுக்கிட்டு இருக்காங்க.இந்த கல்யாணத்தில் கருப்பு கண்ணம்மா இருக்கவே கூடாது எப்படி இதை செய்யலாம் என்று யோசிச்சுகிட்டு இருக்காங்க. கண்ணம்மாவுக்கு வேலைக்காரிக்கு எடுப்பது போல ஒரு புடவை எடுத்து கொடுக்கறாங்க.
நாத்தனார் சுருதி
கண்ணம்மாவின் நாத்தனார் சுருதி தான ஒரு பட்டுப்புடவையை கண்ணம்மாவுக்கு கட்டிக்க கொடுத்து, அவளுக்கு நிறைய நகைகள்போட்டு அலங்கரித்து காரில் ஏற சொல்கிறாள். அதோடு, கல்யாண மண்டபத்துக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் பொறுப்பாக கண்ணம்மா எடுத்து வைத்து விட்டு,காரில் ஏறப்போக இதுல வேணாம்னு சொல்லிடறாங்க சவுந்தர்யா அமமா.
யாரு வீட்டை
கடைசி காரில் ஏறப்போக, எல்லாரும் கிளம்பிட்டா யாரு வீட்டைப் பார்த்துக்குவான்னு சவுந்தர்யா அம்மா கேட்க, நாங்க இருந்து பார்த்துக்கறோம்னு வேலைக்காரி சொல்ல, நீ வந்தால்தான் அங்கே வேலை நடக்கும்னு சொல்லிட்டு நிக்கறாங்க. அப்போ நான் வீட்டை பார்த்துக்கறேன்னு கண்ணம்மா சொன்னதும் ,அந்த அம்மாவுக்கு அப்பாடான்னு நிம்மதியா இருக்குது. அதாவது இந்த கருப்பு பெண்ணை மருமகள் என்று சொல்லிக்க சவுந்தர்யா அம்மாவுக்கு விருப்பம் இல்லையாம்.
இப்படி தன்னை நம்பி வந்த கண்ணம்மாவை கல்யாணத்துக்கு கூட அழைச்சுக்கிட்டு போகாமல் ஒத்தையில விட்டுட்டு போயிட்டானே பாரதி.