Barathi Kannamma Serial: டாக்டரையும் விட்டு வைக்க மாட்றாங்க.. என்னங்கடா உங்க கதை?
சென்னை: ஏற்கனவே டாக்டருங்க மனிதாபிமானம் இல்லாம இருக்கறதா மக்களிடையே பேச்சு இருக்கு. இதை விஜயகாந்த் ரமணா படத்தில் செத்தவருக்கு வைத்தியம் பார்க்க சொல்லி நிரூபிச்சு இருப்பார்.
இப்போ சீரியலிலும் இது போல மனிதாபிமானம் இல்லாத மாதிரி டாக்டருங்க நடந்துக்கற காட்சிகள் வச்சு மக்களின் நம்பகத் தன்மையை சிதைக்கறாங்க.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது நிஜமாவே படபடப்புத்தான் வருது.
கண்ணம்மா பாரதி
கண்ணம்மாவை கருப்பு கண்ணம்மா என்று எல்லாரும் வெறுத்து,அவளைத் திட்டுவதை. அவளுக்கு கெடுதல் செய்வதை பார்த்து நொந்து போயிருக்கிறோம். கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியே கண்ணம்மாவை ஆசைப்படும் பாரதியை தான் அடைய ஆசைப்படும்போது கோவம் வந்தது.
அஞ்சலி அகிலன்
பாரதியின் தம்பி அகிலனை கல்யாணம் செய்துகொண்ட பின்னரும் அஞ்சலி அக்கா கண்ணம்மாவின் புருஷன் பாரதியுடன் சந்தோஷமாக வாழக் கூடாது என்று சதி செய்வதை பார்த்து எரிச்சல் வந்தது.
டாக்டர் வெண்பா
பாரதியுடன் படித்த வெண்பா பாரதியை காதலிச்சாளாம். அவன் தனக்கு கிடைக்காம கருப்பு கண்ணம்மாவுக்கு கிடைச்சதில் டாக்டர் வெண்பாவுக்கு பொறாமை.அவளிடம் இருந்து எப்படியாவது பாரதியை தான் அடைய வேண்டும் என்று கண்ணம்மா மீது வீண் பழி போட்டதில் அஞ்சலியின் வேலைக்காரி நிம்மியிடம் சிக்கிடறா.
பணம் நிம்மி
நிம்மி வெண்பாவின் ஆதாரத்தை வீடியோவாக எடுத்து வெண்பாவிடம் பணம் கேட்டு மிரட்ட பணம் தரேன்னு சொல்லிட்டு, அவளை பாரதியின் ஆஸ்பிடலுக்கு வரச்சொல்லி விஷம் கலந்த காபி கொடுத்துட்டு, உன்னை காப்பாத்தணும்னா என் பணத்தை என்கிட்டே திருப்பிக் குடுத்துடு. அதோட..அந்த வீடியோ ஆதாரத்தையும் குடுத்துடுன்னு மிரட்டறா.
டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருப்பவங்களுக்கும், டாக்டராகி பிராக்டீஸ் பண்றவங்களுக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்குதுங்க.. இந்த லட்சணத்துல இதுக்கெல்லாமா நேரம் இருக்கும்? சகிச்சுக்க முடியலைங்க...