Barathi Kannamma Serial: அட ச்சே! முத்தம் கொடுப்பதற்குள் எத்தனை கற்பனை?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் விழிப்புணர்வு சீரியல்.கருப்பு பெண்களும் அழகானவர்கள்,அவர்களுக்கும் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்கள் என்று எடுத்து காட்டுவதாக இருக்கிறது இந்த சீரியல் கதை.
இந்த சீரியலில் எல்லாருக்கும் கருப்பு பிடிக்காது என்று இல்லை, தி கிரேட் பிசினெஸ் வுமன் சவுந்தர்யா அம்மாவுக்கு மட்டும்தான் கருப்பு என்றால் பிடிக்காது.
சவுந்தர்யா அம்மாவின் பேத்தி கருப்பு என்பதால்,அவளை கூட தொட்டதில்லை இந்த சவுந்தர்யா அம்மா. கருப்பு என்றால் சபை என்று கூட பார்க்காமல் அவமானப்படுத்துவதில் வல்லவர் இந்த சவுந்தர்யா அம்மா.
டாக்டர் பாரதி
தம்பி அகிலனுக்கு பெண் பார்க்க போன இடத்தில் அக்கா கருப்பு கண்ணம்மாவை பாரதிக்கு பிடித்துப் போகிறது. அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்கே அழைச்சுக்கிட்டு வந்துடறான் பாரதி. அப்போதிலிருந்து சவுந்தர்யா அம்மா பிள்ளை பாரதியுடன் கூட அவ்வளவாகப் பேசுவதில்லை. கண்ணம்மா இந்த வீட்டுக்கு சம்பளம் வாங்காத வேலைக்காரியாகத்தான் இருக்கிறாள்.
கண்ணம்மா லவ்
பாரதி மாமா பாரதி மாமான்னு கூப்பிட்டு, பாரதியை லவ் பண்ணுகிறாள் கண்ணம்மா. தங்கை அஞ்சலிக்கும், பாரதியின் தம்பிக்கும் கல்யாணம் நடந்த பிறகுதான் நமக்கு முதலிரவுன்னு பாரதியும், கண்ணம்மாவும் முடிவு பண்றாங்க. இப்போதுதான் அஞ்சலிக்கும், அகிலனுக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சு இன்றைக்கு அவர்களுக்கு முதலிரவு.
முதலிரவு நடக்குமா?
இன்னிக்காவது நமக்கும் முதலிரவு நடக்குமா என்று பாரதி காத்திருக்க, இதைப்பற்றி கொஞ்சம் கூட சிந்தித்ததாகத் தெரியவில்லை கண்ணம்மா. பாரதியின் போட்டோவை வச்சுக்கிட்டு, பாரதி மாமா நீங்க எவ்ளோ அழகு.என்னை பாவம் பார்த்துதான் கல்யாணம் செய்துகிட்டீங்க.என்ன இருந்தாலும் உங்கள் மனசும், நீங்களும் அழகு மாமான்னு சொல்லி போட்டோவை வைக்கிறாள்.
பாரதி எதிரில்
எதிரில் பாரதி முகத்தை மூடிக்கிட்டு நிக்கறான்.என்ன பாரதி மாமா என்ன இப்படி பயமுறுத்தறீங்க.முகத்தை திறங்கன்னு சொல்ல ,ஐயோ..பாரதி மாமா இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா? நானே உங்களை தாடியை ட்ரிம் பண்ண சொல்லணும்னு இருந்தேன்.அவ்ளோ அழகா இருக்கீங்கன்னு சொல்றா.
மாமாவுக்கு முத்தம்
அப்போ இந்த பாரதி மாமாவுக்கு ஒரு முத்தம் கொடுன்னு சொல்ல, ம்ம்ம்.கண்ணை மூடிக்கோங்க..கன்னத்துல தரேன்னு சொல்லிட்டு கொஞ்சம் கொஞ்சமா நெருங்கறா.அவனும் வாயை குவிக்க, ஒரு வேலை அவள் கிட்டத்தில் வரும்போது, முகத்தை திருப்பி அவள் தரும் முத்தத்தை தனது உதட்டில் வாங்கிக்குவானோ...
இல்லை அவள் நேரம் தாழ்த்துவதை அறிந்து, அவளை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருவானோன்னு நம்ம எண்ணம் ஓடுது. ஆனால், நடந்தது என்ன?அங்கே பாருங்க அத்தைன்னு சொல்ல ,அவனும் திரும்பிப் பார்க்க கண்ணம்மா எஸ்கேப்பாகி ஓடிவிடுகிறாள்.
எல்லாம் புஸ்ஸாகிப் போச்சு!