Barathi Kannamma Serial: புழு கூட சாகடிக்க போனா போராடுது... கண்ணம்மா ஏன் இப்படி?
சென்னை: பெண்கள் என்றால் மட்டும் பொறுமை தேவை என்பது இல்லை.பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாக பொறுமை தேவை. குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு இது போல சில விஷயங்களுக்கு பொறுமை தேவைப்படுகிறது.
மற்றபடி பொறுமை என்கிற வார்த்தை இரு பாலாருக்கும் .பொருந்தும். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பெண்களை ரொம்பவே பின்னோக்கி கொண்டு செல்வதாக இருக்கிறது.
விஜய் டிவியின் அத்தனை சீரியல்களும் இந்த ரகத்தில்தான் இருக்கிறது. இதை நிர்வாகம் பார்த்து கொஞ்சம் சீர் செய்தால் தேவலை.
கண்ணம்மா கருப்பு
கருப்பு என்பதால் மட்டுமே கண்ணம்மா எத்தனை கொடுமைகளை அனுபவிக்கிறாள்.அத்தனைக்கும் பொறுமையாக போகும் அளவுக்கு, அவளுக்கு ஏற்ற மாதிரியான சூழ்நிலைகளை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். சின்ன வயசில் பயம் இருக்கும், அப்போது எதுவும் செய்ய முடியாது. இப்போது வளர்ந்து, அவளையும் டாக்டர் பாரதி காதலித்து கல்யாணமும் செய்துகிட்டு, அவளுக்கு பக்க பலமாக இருக்கிறான்.
மாயன் பொண்டாட்டி
கண்ணம்மாவை புகுந்த வீட்டில் வாழ விடாமல் துரத்தி அடிக்க, மாற்றான் தாயும் , அவரது அம்மாவும் சேர்ந்து, மாயன் என்கிற ரவுடியின் மனைவியை, மாற்றான் தாய் தனது மகளின் பாதுகாப்புக்கு புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கறாங்க அவளை.
மாயன் பொண்டாட்டி
ஒரு வேலைக்காரியாக வந்திருக்கும் ரவுடி மாயனின் பொண்டாட்டி, நான் அஞ்சலியின் பாதுகாப்புக்கு மட்டும் இங்கே வந்தேன்னு நினைச்சியா? உன்னை இந்த வீட்டை விட்டு துரத்தி அடிக்கத்தாண்டி வந்திருக்கேன்னு சொல்றா. ஒரு வேலைக்காரி இவ்ளோ திமிரா பேசுறியான்னு கண்ணம்மா கேட்கிறாளே தவிர. மேலும் எதுவும் பேச முடியாமல் நிற்கிறாள்.
பழி உன் மேல்
உங்க அத்தை குடிக்கற காபியில் ஒரு மாத்திரையை கலந்து, நீதான் கலந்து குடுத்தேன்னு சொன்னால், உன் அத்தை அப்படியே என்னை நம்பிருவாங்க .அப்படிப்பட்ட இடத்தில்தான் நீ இந்த வீட்டில் இருக்கேன்னு வேலைக்காரி மிரட்டறா. இதுக்கும் எதிர்த்து பேசாமல், அவளை எதாவது சொல்ல போயி,அது அப்பாவுக்கு பிரச்சனை வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்கறா.
இப்படிப்பட்ட கதைகள் கொண்ட சீரியலைப் பார்த்தால்...நிச்சயமா நெஞ்சு பொறுக்குதில்லை!