Barathi Kannamma Serial: என்னங்க..பர்த் டே கொண்டாட்டம்னு.. வெளியில் வச்சுகிட்டாத்தான் என்னவாம்?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் பிறந்த நாளை வீட்டில்கொண்டாட கூடாதுன்னு சவுந்தர்யா அம்மா சொல்றாங்க.
அதைக் கேட்டுட்டு வெளியில்போயி பர்த் டேவை கிராண்டா கொண்டாடினால்தான் என்ன? அவங்க வெறுக்கணுமாம்..இவங்க அழணுமாம்.. எதுக்கு இந்த வேலை?
கேக்கை வெட்ட போகும்போது அவாய்ட் பண்ணிட்டு போறாங்க சவுந்தர்யா அம்மா. என்னவோ இன்னிக்குத்தான் அவங்களை பார்த்தது போல திகைச்சு நிக்கறாங்க எல்லாரும்.
தல படம்... தீபாவளிக்கு... நாலு மணிக்கு.. பிரியா ராமன்!
கருப்பு கண்ணம்மா
கண்ணம்மா கருப்புன்னு அப்போ பிடிச்சே சவுந்தர்யா அம்மா வெறுக்கறாங்க. இருந்தாலும், கண்ணம்மா ரொம்ப ரொம்ப நல்லவளா இருக்கா. தனக்கு பொறக்கப் போற குழந்தை பெண் குழந்தைன்னா சவுந்தர்யவாம். ஆண் குழந்தைன்னா சவுந்தர்யனாம்.
உங்க பொண்ணு
நான் இப்போ உங்க பொண்ணு சவுந்தர்யான்னு கண்ணம்மா சொல்ல, பாரதி அவளை சவுந்தர்யா சவுந்தர்யான்னு கூப்பிட்டு வீட்டை சுத்தி சுத்தி துரத்தி விளையாடிகிட்டு இருக்காங்க.இதில் நடுவுல வரும் சவுந்தரியா அம்மாவைக் கூட கவனிக்காமல் விளையாட கடுப்பான சவுந்தர்யா என் பேரை இவ பெத்துக்கற குழந்தைக்கு கூட வைக்கக் கூடாதுன்னு கத்தறாங்க.
செய்ய மாட்டேன்னு
சவுந்தர்யா ஹோம் வொர்க் செய் செய்னு கண்ணம்மாவை கட்டில் மேல் நிக்க வச்சு பாரதி மிரட்ட, உண்மையாகவே அங்கு சவுந்தர்யாவை நிக்க வச்சு பயப்படுவது போல நடிக்க வச்சு இருப்பது நல்ல காமெடியாக இருக்கு. ரசிக்கும் படியாவும் இருக்கு.
பிறந்த நாள் கொண்டாட்டம்தாங்க
இந்த பிறந்த நாள் கொண்டாட்டம்தாங்க இடிக்குது. அவங்கதான் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்றாங்களே... விட்டுத் தொலைய வேண்டியதுதானே.வீடு முழுக்க அலங்காரம்.. கேக்கை வெட்டும்போது வருவாங்களான்னு எதிர்பார்த்துக்கிட்டு வேற இருக்காங்க. அவங்க வந்து அலங்காரத்தை ஏளனமா பார்த்துட்டு, அவாய்ட் பண்ணிட்டு போறாங்க. கண்ணம்மா அழற மாதிரி நிக்கறா..