பளிச் சேலையில் தேவதை போல ஜொலிக்கறீங்களே கண்ணம்மா!
சென்னை: டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி கண்ணம்மா தற்போது எடுத்து இருக்கும் போட்டோ ஷூட்தான் வைரலாக பரவி வருகிறது.
இவருடைய போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் கண்ணம்மா இது எப்படி இவ்வளவு அழகாக மாறி இருக்கிறார் என்று ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.
நெட்டிசன்களும் மீம்ஸ் கிரியேட்டர்களாலும் பலர் திடீரென்று பாப்புலர் ஆகிவிடுகிறார்கள். அந்த மாதிரி தான் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வாக நடித்த ரோஷ்னி ஹரிப்ரியனையும் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாப்புலர் ஆகிவிட்டார்.
முந்தானையை காற்றில் பறக்கவிட்டு மொட்டை மாடியில் கலக்கிய ரித்விகா
செம கேரக்டர்
அதுவரைக்கும் இந்த சீரியலை பார்க்காமல் இருந்த பலரும் கூட அவர் பேக்கை தூக்கி கொண்டு நடந்ததைப் பார்த்து பலரும் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் ஐயோ பாவம் என்று பெரும் பெண்கள் ரசிகர்களும் கூறிவிட்டார்கள்.பலருக்கு அவரது பெயர் ரோஷ்னி என்று கூட தெரியாது. அந்த அளவிற்கு அவர் கனவாகவே அனைவர் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .
பேக்குடன் நடந்ததை மறக்க முடியுமா
இவர் இந்த சீரியலுக்கு வரும்போது எந்த மேக்கப்பும் இல்லாமல் தனது தலை முடியை பின்னி போட்டுக்கொண்டு
லாங்கான டாப்பை போட்டுக்கொண்டு சாதாரணமாக இருந்ததை பார்த்து இவர் காதுபடவே பல நடிகர்களும் பேசி இருக்கிறார்கள் .இவரல்லாம் ஒரு ஹீரோயினா வாய்ப்பே இல்ல . இவருக்கு இது செட்டாகாது என்றெல்லாம் கூறியிருக்கிறாராம்.
கலரை வைத்து விமர்சனம்
அப்போது மனதுக்கு இவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்குமாம் அவ்வளவா நாம பேட் ஆக இருக்கிறோம் என்று இவர் மேலே இவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வருமாம். இருந்தாலும் இவர் சிரித்துக் கொண்டுதான் கடந்து சென்று இருக்கிறாராம். இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பாக இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாவில் கலக்கல்
அதுவும் இவருக்கு பிடிக்காததால் அதை விட்டுவிட்டு சுயமாக பிசினஸ் பண்ணி கொண்டு இருந்தாராம் .அந்த நேரத்தில் தான் இவருக்கு தன்னைத்தானே புகைப்படம் எடுப்பதும் ரொம்பவே பிடித்ததாம். போட்டோ எடுத்து அதை எடிட் பண்ணுவது ரொம்ப பிடித்த தாம் .அதனால் இவரே விதவிதமான போட்டோக்களை எடுத்து நாமளும் அழகாகத்தான் இருக்கிறோம் என்று அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி வந்திருக்கிறார்.
தேடி வந்த வாய்ப்பு
இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோவை பார்த்து தான் இந்த சீரியலின் இயக்குனர் இவருக்கு கால் பண்ணி பேசி இருக்கிறார். முதலில் பாரதிகண்ணம்மா சீரியல் இன் இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இவரிடம் பேசும் போது இவர் நம்ப கூட இல்லையாம். யாரோ கால் பண்ணி கலாய்க்கிறார்கள் என்று தான் நினைத்து இருக்கிறார் . ஆனால் அதன்பிறகு அவர் உண்மையான காரணத்தையும் பற்றி சொல்லிய பிறகுதான் இவர் நம்பியிருக்கிறார்.
இப்படி ஒரு லைப்
இவருக்கு இந்த சீரியலில் நடிக்கும்போது நடிப்பு எதுவும் தெரியாததால் முழுக்க முழுக்க அவரை தான் நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார் .இந்த சீரியலுக்கும் பிரஷர் தான் வேண்டும் என்பதால் இவரை தேர்வு செய்திருக்கிறார்கள். இவர் போட்டோக்களை எடுத்து குவிக்கும் போது கூட நினைத்துப் பார்க்கவில்லையாம் தனக்கு இப்படி ஒரு லைப் கிடைக்கப்போகிறது என்று.
சேலையில் அம்சமா இருக்காரே
எதார்த்தமாக சீரியலுக்கும் அறிமுகமானாலும் இவர் அறிமுகமான முதல் சீரியலில் இந்த அளவிற்கு படுபயங்கரமாக பாப்புலர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவருடைய ஒரிஜினல் அழகை ரசிக்க வைத்திருக்கிறார் .அந்த மாதிரி தான் தற்போது சேலை கட்டிக்கொண்டு இவர் எடுத்திருக்கும் போட்டோஸ்களிலும் அதிகமான மேக்கப் எதுவும் பண்ணாததால் ரசிகர்கள் இவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.