Barathi Kannamma Serial: பாரதி காதலியே...கண்ணம்மா... கண்ணம்மா!
சென்னை: விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலின் கதைச் சுருக்கத்தை கூறி, அதற்கான காட்சிகளை ஒளிபரப்பி, காத்திருங்கள் உங்கள் விஜயில் பாரதி கண்ணம்மா சீரியல் என்று சீரியலுக்கான ப்ரோமோ வெளியிட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் சின்னத்திரை சீரியல்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி என்று தகவல் வெளியிட்ட தமிழக அரசு, படப்பிடிப்பு தளங்களுக்கு மற்றும் படப்பிடிப்பு நடத்த என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதை ஏற்றுக்கொண்டு, சில சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாகவும் தெரிகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல், லாக்டவுன் காலத்தில் மறு ஒளிபரப்பும் செய்யப்படவில்லை. இந்த நேரத்தில்தான் காத்திருங்கள் என்று கதைச்சுருக்கத்தை சொல்லி, ப்ரோமோ வெளியிட்டு வருகிறது விஜய் டிவி.
கொரோனா பாதிப்பு எதிரொலி: தினமும் 4 முறை சுத்தம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்கள்
20 நபர்கள் போதாது
சின்னத்திரை சீரியல்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திருமதி சுஜாதா விஜயகுமார், அரசு சொல்வது போல 20 நபர்களை வைத்துக்கொண்டு சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்துவது கஷ்டம் என்று கூறியுள்ளார். மேலும் தேவையான ஆட்களை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த அனுமதி வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா
இந்த நேரத்தில்தான் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலைப் பார்க்க காத்திருங்கள் மிக விரைவில் என்றும் ப்ரோமோ போடுகிறார்கள். கதைச்சுருக்கத்தில் இதுவரை நடந்த கதையை கூறி, இனி நடக்க இருப்பதை காண காத்திருங்கள் என்றும் சொல்வதானால், விஜய் டிவி சீரியல்களுக்கான படப்பிடிப்பு துவங்கி விட்டது என்றே தெரிகிறது.
பாரதி கண்ணம்மா
கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான் டாக்டர் பாரதி. நாளடைவில் கருப்பு நிறம் என்பது சீரியலில் காணாமல் போயி, மாமியாரே கண்ணம்மா கர்ப்பமாக இருப்பதனால், கோபத்தை மறந்து ஏத்துக்கறாங்க. ஆனால், பாரதியை காதலித்த வெண்பா பாரதி நிம்மதியாக இருக்க கூடாது என்று கண்ணம்மா மீது பழி சுமத்துகிறாள்.
குழந்தை பிறக்காது
பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று பொய்யான சான்றிதழை நாம்தானே கொடுத்தோம்..அதையும் பாரதி நம்பினான் என்று, மீண்டும் பாரதியிடம் வந்து போட்டு பார்க்கிறாள். உனக்கு குழந்தை பிறக்காதுன்னு எனக்கும் உனக்கும் மட்டும்தானே தெரியும். உனக்கு குழந்தை பிறக்காதுன்னா கண்ணம்மா வயிற்றில் இருக்கும் குழந்தை யாருதுடா என்று கேட்டு அவனை கொதிக்க வைக்கிறாள். இதே கோவத்தோடு இருங்க.. மீண்டும் விரைவில் பாரதி கண்ணம்மா என்று போடுகிறார்கள்.