பிக்பாஸ் 2 : கட்டிப்பிடிக்கத் தெரியாமல் திணறிய செண்டு... ஈஸியாக தலைவியான வைஷூ!
பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக வைஷ்ணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : கட்டிப்பிடி டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டின் இவ்வாரத்திற்கான தலைவியாகி இருக்கிறார் வைஷ்ணவி.
பிக்பாஸ் வீட்டில் வாரந்தோறும் போட்டியாளர்களில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களது தலைமையின் கீழ் மற்ற போட்டியாளர்கள் குழுக்களாகப் பிரிந்து வீட்டின் வேலைகளை பகிர்ந்து கொண்டு, செயல்படுவர்.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்த மூன்று வாரங்களில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான முறையில் வீட்டின் தலைவி தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
முதல் தலைவி:
முதல்வாரம் வீட்டின் தலைவியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டார். அப்போது டாஸ்க் ஒன்றின் மூலம் அவர் வேட்பாளராகி, பின்னர் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பிரச்சாரம் செய்து தலைவியானார்.
இரண்டாவது தலைவி:
இரண்டாவது வாரம் வீட்டின் தலைவியாக நித்யா தேர்வு செய்யப்பட்டார். இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் சரியாக இருக்கும் என சக போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்களில் பெரும்பாலானோர் நித்யா எனப் பதிலளிக்க, அவரையே அவ்வார வீட்டின் தலைவியாக்கி அழகு பார்த்தார் பிக்பாஸ்.
புதிய தலைவி:
இந்நிலையில், மூன்றாவது வாரமான இவ்வாரம், கன்பெக்சன் அறையில் இருக்கும் நாற்காலியில் முதலில் அமரும் நபர் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவர் என அறிவித்தார் பிக்பாஸ். இதனால் அனைவரும் அடித்துப் பிடித்து ஓட, முதலில் சேரை ஆக்கிரமித்தது வைஷ்ணவியும், சென்றாயனும்.
கட்டிப்பிடி வைத்தியம்:
எனவே, அவர்களுக்கு இடையே சிறிய போட்டி வைத்து, அவர்களில் ஒருவரை தலைவராக்குவது என பிக்பாஸ் முடிவு செய்தார். அதன்படி, வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் யார் கட்டிப்பிடி வைத்தியம் பெறுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
சென்றாயன் தோல்வி:
எப்படி கட்டிப்பிடி வைத்தியம் பெறுவது எனத் தெரியாமல் சென்றாயன், தத்துபித்தென விழிக்க, வைஷ்ணவி அழுது நடித்து வெற்றி பெற்றார். இதனால் இந்த வார தலைவியானார் அவர். எனவே, அவரை இந்த வாரம் யாரும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்பதே சக போட்டியாளர்களுக்கு கவலையாக மாறியது.