பிக் பாஸ் மேடையில் ‘மூக்கை’ உடைத்த ரம்யா... கமலுக்கு ஒரு ‘குறும்படம்’ ப்ளீஸ் !
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பாடகி ரம்யா.
Recommended Video
சென்னை: அழகுக்காக மட்டுமே ஜனனிக்கு அந்த பார்பி பொம்மையை அளித்ததாகக் கூறி, மாற்றிப் பேசியதாக கமல் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார் ரம்யா.
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா நேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை, மேடையில் சந்தித்தார் கமல்.
அப்போது வழக்கம்போல ரம்யாவுக்கு ஜாலி டாஸ்க் ஒன்று அளிக்கப்பட்டது.
விளையாட்டுப் பொருட்கள்:
அதாவது, மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில விளையாட்டுப் பொருட்களில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பொருத்தமானவற்றை தேர்வு செய்து பொருத்த வேண்டும். அதன்படி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளாக வைத்தார் ரம்யா.
பொன்னம்பலத்திற்கு டாக்டர் செட்:
வைஷ்ணவிக்கு கூலிங் கிளாஸ், மஹத்துக்கு தூங்குமூச்சி எமோஜி பொம்மை, மும்தாஜுக்கு அழுமூச்சி பொம்மை, ரித்விகாவுக்கு கண்ணாடி, பொன்னம்பலத்திற்கு டாக்டர் செட் என ஒவ்வொன்றாக காரணம் சொல்லி வைத்தார் ரம்யா.
விளக்கம்:
அதில், அழகு மீது அதிக கவனம் கொண்டவர் என்ற பொம்மையை ஜனனிக்கு வைத்தார் ரம்யா. அவர் எப்போதும் அழகின் மீது கவனம் கொண்டவர் அல்ல, ஆனால் பார்ப்பதற்கு மேக்கப் இல்லாமலேயே அழகாக இருப்பார் என விளக்கம் அளித்தார்.
தப்பு.. தப்பு
பின்னர் இந்த விளையாட்டை அகம் டிவி வழியாக பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களுக்கு காண்பித்தார் கமல். அப்போது ஜனனியை அழகின் மீது கவனம் கொண்டவர் என்றார். ஆனால் தான் அப்படிக் கூறவில்லை என்றார் ரம்யா.
மக்கள் சாட்சி:
அதற்கு, ‘இப்போது அவர் மாற்றிப் பேசுகிறார்' என்றார் கமல். இதற்கு உடனடியாக பதிலளித்த ரம்யா, ‘நான் அப்படிக் கூறவில்லை. உண்மைதானே' என பார்வையாளர்களையும் சாட்சிக்கு அழைத்தார். அவர்களும் அதனை ஆம் எனக் கூற, கமலுக்கு எப்படியோ ஆகி விட்டது. ஆனால், அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இது பத்தி ஒரு குறும்படம் போடலாமா கமல் சார்..!