‘தமிழகத்தின் சர்வாதிகாரி’.. பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரித்விகா!
பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரித்விகா.
Recommended Video
சென்னை : பிக் பாஸ் வீட்டில், 'தமிழகத்தின் சர்வாதிகாரி' என முக்கிய அரசியல்தலைவர் ஒருவரைக் குறித்து மறைமுகமாகப் பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரித்விகா.
ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் குறைவாகச் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், விறுவிறுப்பைக் கூட்ட ஏதேதோ செய்து வருகிறார்கள். அதிலும் புதிய ஐடியாக்கள் இல்லாமல், நிகழ்ச்சியின் போக்கிலேயே சென்று சில டாஸ்க்குகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தலைவியாக பிக் பாஸ் வீட்டில் சர்வாதிகாரம் செய்த ஐஸ்வர்யாவை, நிஜமாகவே சர்வாதிகாரியாக்கி புதிய டாஸ்க் அளித்துள்ளார் பிக் பாஸ்.
லைவ் வீடியோ:
அதோடு போட்டியாளர்கள் மேலும் மோதிக் கொள்ளும் வகையில் தொடர்ந்து குளறுபடியாக வேலைகளையும் பிக் பாஸ் செய்து வருகிறார். அந்தவகையில் ஏற்கனவே பாலாஜி மீது கோபத்தில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு, பாலாஜியின் லைவ் புறணி வீடியோவைப் போட்டிக் காட்டி சூடேற்றினார்.
சிலையை உடைக்க திட்டம்:
அந்த வீடியோவில், ஐஸ்வர்யாவின் சர்வாதிகார போக்கு பற்றி பாலாஜி, ஷாரிக் மற்றும் ரித்விகா ஆகியோர் ஐஸ்வர்யா பற்றி சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்வர்யாவின் சிலையை உடைப்பது பற்றி அவர்கள் திட்டமிட்டனர்.
ஷாரிக் பதில்:
அதோடு, ‘தமிழகத்தில் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என அவளுக்குத் தெரியாதா?' என்றார் ரித்விகா. அதற்கு ஷாரிக், ‘அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை' என்றார். அதாவது ஐஸ்வர்யா பெங்காலிப் பெண் என்பதால் அப்படி அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து, ‘அவளை யார்னு அவளுக்கேத் தெரியாது' எனக் கூறினார் பாலாஜி.
மீண்டும் சர்ச்சை:
ஏற்கனவே, இறுதிச்சுற்றில் தமிழ்ப்பெண் தான் வர வேண்டும் என இரண்டு முறை கூறி சர்ச்சையில் சிக்கியவர் ரித்விகா. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரைப் பற்றி மறைமுகமாகப் பேசி மீண்டும் அவர் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இவர் தான் என அவர் சம்பந்தப்பட்ட தலைவரைக் குறிப்பிடவில்லை என்ற போதும், அவர் கூறியது யாரை என தமிழக மக்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.